Published : 13 Nov 2025 07:00 AM
Last Updated : 13 Nov 2025 07:00 AM

டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக அல் பலா பல்கலை. மருத்துவர்களிடம் விசாரணை

புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழக. மருத்துவர்களிடம் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு மற்​றும் பெரு​மளவு வெடிபொருள் பறி​முதல் சம்​பவங்​களை தொடர்ந்து ஹரி​யானா மாநிலம் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகம் தேசிய அளவில் கவனம் ஈர்த்​துள்​ளது.

இங்கு கடந்த சில நாட்​களாக போலீ​ஸார் அடிக்​கடி சென்று இங்​குள்ள 52 மருத்​து​வர்​களிடம் விசா​ரணை நடத்​தினர். டெல்லி கார் குண்டு வெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள் பற்​றிய தகவல்​களை திரட்டி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் இவர்​களு​டன் தொழில்​முறை தொடர்​பு​களை தவிர வேறு எந்த தொடர்​பும் இல்லை என பல்​கலைக்கழக நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. தவறான செய்​தி​கள் மற்​றும் அவதூறு குற்​றச்​சாட்​டு​களை மறுத்​துள்​ளது.

ஹரி​யா​னா - டெல்லி எல்​லை​யி​லிருந்து சுமார் 27 கி.மீ தொலை​வில் பரி​தா​பாத், தவுஜ் பகு​தி​யில் இந்​தப் பல்​கலைக்​கழகம் அமைந்​துள்​ளது. 70 ஏக்​கருக்கு மேல் பரந்து விரிந்​துள்​ளது. 2014-ல் நிறு​வப்​பட்​டு, அடுத்த ஆண்டு பல்​கலைக்கழக மானியக் குழு​வால் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளது.

அல் பலா அறக்​கட்​டளை​யின் கீழ் 1997-ல் முதன் முதலில் பொறி​யியல் கல்​லூரி தொடங்​கப்​பட்​டது. பிறகு இது மருத்​து​வம், கணினி அறி​வியல் உள்​ளிட்ட பல்​வேறு படிப்​பு​களு​டன் பல்​கலைக்​கழக​மாக மாறியது. அல் பலா மருத்​துவ அறி​வியல் மற்​றும் ஆராய்ச்சி மையம் 2019 முதல் எம்பிபிஎஸ் பட்​டங்​களை வழங்கி வரு​கிறது. இது 650 படுக்​கைகள் கொண்ட மருத்​து​வ​மனை​யுடன் இணைக்​கப்​பட்​டுள்​ளது.

இங்கு எம்​பிபிஎஸ் படிப்​புக்கு ஆண்​டு​தோறும் 200 மாணவர்​கள் சேர்க்​கப்​படு​கின்​றனர். இந்​தப் படிப்​புக்கு முதல் 4 ஆண்​டு​களுக்கு தலா ரூ.16.37 லட்​ச​மும், இறுதி ஆண்​டுக்கு ரூ.9 லட்​ச​மும் பல்​கலைக்​கழகம் வசூலிக்​கிறது. இந்த ரூ.74.50 லட்​சம் தவிர விடு​திக்கு ஒவ்​வொரு ஆண்​டும் ரூ.3 லட்​சம் வசூலிக்​கப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x