Published : 12 Nov 2025 12:42 AM
Last Updated : 12 Nov 2025 12:42 AM

ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்த உ.பி. பெண் மருத்துவர் ஷாகின் யார்?

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் லக்​னோவைச் சேர்ந்த ஷாகின். ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா மருத்​து​வக் கல்​லூரி​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்​பாக்கி கைப்​பற்​றப்​பட்​டது. இதை யடுத்து அவர் கைது செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து ஹரி​யானா போலீ​ஸார் கூறிய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானில் செயல்​பட்ட ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் முகாம்​கள் ஏவு​கணை தாக்​குதல் மூலம் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டன. இதில் ஏராள​மான தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர்.

அவர்​களின் மனை​வி​களை ஒன்​றிணைத்து கடந்த அக்​டோபரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்​பில் மகளிர் பிரிவு தொடங்​கப்​பட்​டது. இந்த அமைப்​புக்கு ஜமாத் அல் மோமினா என்று பெயரிடப்​பட்டு உள்​ளது. ஜெய்ஷ் அமைப்​பின் தலை​வர் மசூத் அசா​ரின் தங்கை சாதியா அசார், மகளிர் பிரி​வின் தலை​வ​ராக உள்​ளார். சாதி​யா​வின் கணவர் யூசுப் அசார், காந்​தஹார் விமான கடத்​தலின் மூளை​யாக செயல்​பட்​ட​வர் ஆவார். ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது அவர் உயி​ரிழந்​தார்.

இதற்கு பழி​வாங்க சாதியா அசார், தீவிர​வாத மகளிர் பிரிவு தலை​வ​ராக பதவி​யேற்று இந்​திய பெண்​களை இணை​யதளம் வாயி​லாக மூளைச் சலவை செய்து வரு​கிறார். இதன் ஒரு பகு​தி​யாகவே ஜெய்ஷ் இ முகமது அமைப்​பின் இந்​திய மகளிர் பிரிவு தலை​வ​ராக மருத்​து​வர் ஷாகின் நியமிக்​கப்​பட்டு உள்​ளார். ஷாகினோடு தொடர்​பில் இருந்​தவர்​கள் யார் என்​பது குறித்து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x