Published : 10 Nov 2025 07:32 AM
Last Updated : 10 Nov 2025 07:32 AM

பாலம் வரும் வரை வாக்கு இல்லை: பிஹார் கிராம மக்கள் உறுதி

கயா: பிஹார் மாநிலம் கயா நகரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பத்ரா, ஹெர்ஹஞ்ச், கெவால்தி ஆகிய கிராமவாசிகளுக்கு வளர்ச்சி என்பது கனவாகவே உள்ளது.

மோர்ஹர் ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்பதுதான் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராம மக்களின் 77 ஆண்டு கோரிக்கை. சந்தை, பள்ளி கல்லூரி, மருத்துவமனை செல்ல வேண்டுமானால் மார்பளவு தண்ணீரில் நீந்தி செல்ல வேண்டி உள்ளது. இதுதவிர, ஆண்டுதோறும் மழைக் காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் 4 மாதங்களுக்கு மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து கிராமவாசி பெண் ஒருவர் கூறும்போது, ‘‘எங்களுக்கு பாலம் கட்டித் தரும் வரை நாங்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x