Published : 09 Nov 2025 09:21 AM
Last Updated : 09 Nov 2025 09:21 AM
கடிஹார்: பிஹாரில் இரண்டாம் கட்டமாக 122 பேரவை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பிஹாரின் கடிஹாரில் என்டிஏ சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பிஹாரில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் பேரணியை லாலுவும் ராகுல் காந்தியும் தொடங்கியுள்ளனர். சீமாஞ்சலை ஊடுருவல்காரர்களின் கோட்டையாக அவர்கள் மாற்ற விரும்புகின்றனர்.
ஆனால் நாங்கள் சீமாஞ்சலில் இருந்து ஊடுருவல்காரர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வெளியேற்றுவோம். ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக பிஹாரை மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT