Published : 09 Nov 2025 01:16 AM
Last Updated : 09 Nov 2025 01:16 AM

மதம் மாறியவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு: சத்தீஸ்கர் கிராமத்தில் 3 நாட்களாக குடும்பத்தினர் தவிப்பு 

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு வந்​து, தங்​கள் சொந்த நிலத்​தில் அடக்​கம் செய்ய ஏற்​பாடு செய்​தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய​வர் என்​ப​தால், அவரது உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.

போலீ​ஸார் நடத்​திய பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்​தது. இதையடுத்து சராமா கிராமத்​தில் உடலை அடக்​கம் செய்ய எடுத்து சென்​றனர். அங்​கும் இந்​துக்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். கடந்த 3 நாட்​களுக்கு கிராமம் கிராம​மாக உடலை எடுத்​துக் சென்று அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவிக்​கின்​றனர். இதையடுத்து மனிஷ் உடல் மீண்​டும் கோடிகுர்ஸ் மருத்​து​மவனைக்கு கொண்டு செல்​லப்​பட்டு பிணவறை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது.இதற்​கிடை​யில் கிறிஸ்​தவர்​கள் பலர் கோடிகுர்ஸ் போலீஸ் நிலை​யத்தை முற்​றுகை​யிட்டு உடலை அடக்​கம் செய்ய வேண்​டும் என்று ஆர்ப்​பாட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து சரா​மா​வில் உள்ள அனுகிரா பிரார்த்​தனை கூடத்​தின் பாஸ்​டர் மோகன் குவல் கூறும்​போது, ‘‘மனிஷ் உடலை அவரது சொந்த இடத்​தில் அடக்​கம் செய்ய வேண்​டும். அதை தவிர வேறு வழி​யில்​லை’’ என்​றார்.

பஞ்​சா​யத்து உறுப்​பினர் தேவேந்​திர டெகம் கூறுகை​யில், ‘‘கோடிகுர்ஸ் கிராம மக்​கள் பாரம்​பரி​யத்தை கண்​டிப்​பாக பின்​பற்​று​பவர்​கள். உடலை அடக்​கம் செய்​வதற்கு அவர்​களுக்கு என்று தனி பழக்​கம் இருக்​கிறது. உடலை அடக்​கம் செய்ய வேண்​டு​மா​னால், அவர்​களு​டைய முறைப்​படி​தான் செய்ய வேண்​டும். அப்​படி இல்​லை​யென்​றால் உடலை வேறு எங்​காவது கொண்டு செல்ல வேண்​டும்’’ என்று கிராமத்​தினருக்கு ஆதர​வாக கூறி​னார்.

இதற்கு முன்​பும் சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் பஸ்​தார் உட்பட பல இடங்​களில் மதம் தொடர்​பான பிரச்​சினை​யில் பல உடல்​களை அடக்​கம் செய்ய எதிர்ப்​பு கிளம்​பியது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x