Published : 09 Nov 2025 01:05 AM
Last Updated : 09 Nov 2025 01:05 AM

புதிய வந்தே பாரத் ரயில்கள் அதிக வசதிகளை தருகின்றன: பிரதமர் மோடி பெருமிதம்

உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த சிறாருடன் பிரதமர் மோடி பேசி மகிழ்ந்தார். படம்: பிடிஐ

வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலை​யத்​திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

புதிய வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில்​கள் பனாரஸ்​–கஜு​ராஹோ, லக்​னோ–ஷஹா​ரான்​பூர், பிரோஸ்​பூர்​–டெல்​லி, எர்​ணாகுளம்​–பெங்​களூரு ஆகிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும்.

வாராணசி​யில் நடை​பெற்ற விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இந்​தியா சர்​வ​தேச அளவில் பொருளா​தார வளர்ச்​சி​யில் மிக வேக​மாக வளர்ந்து கொண்டு இருக்​கிறது. தற்​போது, இந்​திய ரயில்​வே​யில் வந்தே பாரத், நமோ பாரத், அம்​ரித் பாரத் வகை ரயில்​கள் அடுத்த தலை​முறைக்​கான ரயில்​களாக உரு​வெடுத்து உள்​ளன. நாடு முழு​வதும் 160 வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இதன் காரண​மாக கடந்த 11 ஆண்​டு​களில் உத்​தரபிரதேசம் புதிய வளர்ச்சிப் பாதையை எட்டி இருக்​கிறது.

தற்​போது தொடங்​கப்​பட்​டுள்ள புதிய 4 வந்தே பாரத் ரயில்​களில் அதிக சொகுசு, வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​கள் பொது​மக்​களுக்கு அதிக சொகுசு, வசதி​களைத் தரும். இந்த ரயில்​கள் நாட்​டின் முக்​கிய நகரங்​களை இணைக்​கும். நேரத்தை கணிச​மாக குறைக்​கும். இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x