Published : 08 Nov 2025 08:33 AM
Last Updated : 08 Nov 2025 08:33 AM

வந்தே மாதரம் பாடலைப் பாட சமாஜ்வாதி எம்எல்ஏ மறுப்பு

மும்பை: ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்​றப்பட்டு 150 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததை நினை​வு​கூரும் வகை​யில், நேற்று நாடு முழு​வதும் கொண்​டாட்​டங்​கள் நடை​பெற்​றன.

மும்​பை​யில் நடை​பெற்ற வந்தே மாதம் பாடல் கொண்​டாட்ட நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றவர்​களு​டன் இணைந்து பாட மகா​ராஷ்டிர மாநில சமாஜ்​வா​திக் கட்​சித் தலை​வரும், மன்​குர்த் சிவாஜி நகர் தொகுதி எம்​எல்​ஏவு​மான அபு ஆஸ்மி மறுத்தார்.

முஸ்​லிம்​களின் கடவுளான அல்லா மீது நம்​பிக்கை வைத்​திருப்​பவர்​கள், தங்​கள் தாயைக் கூட வணங்​கத் தேவை​யில்​லை.

இந்​தப் பாடலை யாரும் கட்​டாயப்​படுத்தி பாட வைக்க முடி​யாது. வந்தே மாதரம் பாடலைப் பாட விரும்​பு​கிறவர்​கள் பாடட்​டும். முஸ்​லிம்​கள் கூட இந்​தப் பாடலைப் பாடு​கின்​றனர். ஆனால், அல்​லாவை தொழுபவர்​கள் வேறு யாரை​யும் வணங்​க​மாட்​டார்​கள் என்று அபு ஆஸ்மி தெரி​வித்​தார். அபு ஆஸ்​மி​யின் இந்த பேச்சு சர்ச்​சையை எழுப்​பி​யுள்​ளது.

இதற்கு பாஜக கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இதையடுத்து மும்​பை​யிலுள்ள அபு ஆஸ்​மின் வீட்​டின் பாஜக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் திரண்டு கண்​டனக் குரல்​களை எழுப்​பினர். அபு ஆஸ்​மியை பாஜக தலை​வர்​கள் தொடர்ந்​து
கண்​டித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x