Last Updated : 07 Nov, 2025 07:27 AM

1  

Published : 07 Nov 2025 07:27 AM
Last Updated : 07 Nov 2025 07:27 AM

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காசி எனும் வாராணசி​யில் கடந்த 2022-ம் ஆண்டு காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்சி முதல் முறை​யாக நடத்​தப்​பட்​டது.

வாராணசிக்​கும் தமிழ்​நாட்​டுக்​கும் உள்ள பண்​டைய காலம் முதல் உள்ள தொடர்பை வலுப்​படுத்​தும் வகை​யில் இந்​நிகழ்ச்சி நடை​பெற்​றது. வாராணசி தொகுதி எம்​.பி.​யாக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். எனவே, அவரே காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை நடத்த அறிவுறுத்​தி​னார். அதன்​படி கடந்த 3 ஆண்​டு​களாக இந்​நிகழ்ச்சி சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது.

இந்​நிலை​யில், டிசம்​பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை காசி தமிழ்ச் சங்​கமம் 4.0 நடை​பெற உள்​ளது. இதற்​கான அதி​காரப்​பூர்வ அறி​விப்பை மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்​ளது.

இதுகுறித்து மத்​திய கல்​வித் துறை அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தனது எக்ஸ் தளத்​தில், ‘‘தமிழ்​நாட்​டுக்​கும் காசிக்​கும் இடையி​லான நித்​திய பிணைப்பை கொண்​டாடு​தல். ‘பன்​முகத்​தன்​மை​யில் ஒற்​றுமை’, கலாச்​சா​ரம், பாரம்​பரி​யம் மற்​றும் அறி​வின் புனித சங்​கமம் மீண்​டும் ஒரு​முறை திரும்​பு​கிறது! காசி தமிழ்ச் சங்​கமம் 2025 (கேடிஎஸ் 4.0) - தமிழ்​நாட்​டுக்​கும் காசிக்​கும் இடையி​லான காலத்​தால் அழி​யாத நாகரிக இணைப்​பைக் கொண்​டாடு​கிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை மீண்​டும் உறு​திப்​படுத்​துகிறது’’ என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி மண்டல ஆணை​யரும் கேடிஎஸ் 4.0 வின் முக்​கியப் பொறுப்​பாள​ரு​மான தமிழர் எஸ்​.​ராஜலிங்​கம் கூறிய​தாவது: இந்த முறை காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சிக்கு 7 பிரி​வினர் தமிழகத்​தில் இருந்து அழைத்து வரப்பட உள்​ளனர்.

மாணவர்​கள், ஆசிரியர்​கள், எழுத்​தாளர்​கள் உள்​ளிட்ட ஊடகங்​கள், வேளாண்மை மற்​றும் அதனுடன் தொடர்​புடைய துறை​கள், தொழில் வல்​லுநர்​கள் மற்​றும் கைவினைஞர்​கள், பெண்​கள் மற்​றும் ஆன்​மீக அறிஞர்​கள் அந்​தக் குழுக்​களில் இடம்​பெறுகின்​றனர்.

மேலும் 1,400-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 7 ரயில்​கள் தமிழ்​நாட்​டின் ராமேஸ்​வரத்​தில் இருந்து கிளம்​பு​கிறது. முதல் குழு, நவம்​பர் 30 அன்று ரயி​லில் கிளம்பி டிசம்​பர் 2 காலை வாராணசி சேரு​கின்​றனர். மேலும் பல புதிய நிகழ்ச்​சிகளை கேடிஎஸ் 4.0-ல் சேர்க்க திட்​ட​மிட்டு வரு​கிறோம்.
இவ்​வாறு எஸ்​.​ராஜலிங்​கம் கூறி​னார்.

காசி தமிழ்ச் சங்​கமம் நிகழ்ச்​சியை டிசம்​பர் 2-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்​கிறார். இதில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உள்ளிட்டோர் கலந்து கொள்​கின்​றனர்.

இந்த முறை தமிழ்ச் சங்​கமத்​தின் நிறைவு விழாவை ராமேஸ்​வரத்​தில் நடத்த திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. இந்​நிகழ்ச்​சி​யின் பொருளாக ‘தமிழ் கற்​பித்​தல்’ தேர்வு செய்​யப்​பட்​டள்​ளது. அதன்​படி தமிழகத்​தில் இருந்து வரும் ஆசிரியர்​கள், வாராணசி கல்​லூரி மற்​றும் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு தமிழ்​மொழியைக் கற்​றுக் கொடுக்க உள்​ளனர். அதே​போல், வாராணசி​யில் இருந்​தும் கல்​லூரி மற்​றும் பள்​ளி​களின் 300 மாணவர்​கள் 30 குழுக்​களாக தமிழ்​நாட்​டுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளனர். இவர்​கள் ஐஐடி, அண்ணா தொழில்​நுட்​பப் பல்​கலைக்​கழகம், சாஸ்​திரா பல்​கலைக்​கழகம் உள்​ளிட்ட முக்​கியக் கல்வி நிலை​யங்​களுக்கு விஜ​யம் செய்ய உள்​ளனர்.

வாராணசி வருபவர்​களை பிர​யாக்​ராஜ் மற்​றும் அயோத்​திக்கு அழைத்​துச் செல்ல உள்​ளனர். இங்​குள்ள கோயில்​களில் தரிசனங்​கள் முடித்து அனை​வரும் வீடு திரும்​பும் வரையி​லான செல​வு​களை மத்​திய அரசும், உ.பி. அரசும் இணைந்து செய்​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x