Last Updated : 06 Nov, 2025 06:36 PM

 

Published : 06 Nov 2025 06:36 PM
Last Updated : 06 Nov 2025 06:36 PM

பிஹார் முதற்கட்ட தேர்தல்: மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவு

பிஹார் தேர்தலில் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிய பெண்கள்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கான முதற்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை 60.13% வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் நடைபெற்ற 18 மாவட்டங்களில் அதிகபட்சமாக பெகுசராய் மாவட்டத்தில் 67.32% வாக்குகள் பதிவாகி உள்ளன. தலைநகர் பாட்னாவில் 55.02% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 64.96% வாக்குகளும், முசாஃபர்பூர் மாவட்டத்தில் 64.63% வாக்குகளும் பதிவாகி உள்ளன. லக்கிசராய் மாவட்டத்தில் 62.76% வாக்குகளும், மதேபுரா மாவட்டத்தில் 65.74% வாக்குகளும் பதிவாகி உள்ளன. போஜ்பூர் மாவட்டத்தில் 53.24%, பக்ஸர் மாவட்டத்தில் 55.10%, தர்பங்காவில் 58.38%, காகாரியாவில் 60.65%, முங்கெரில் 54.90%, நாளந்தாவில் 57.58%, சஹார்சாவில் 62.65%, சமஸ்திபூரில் 66.65%, சரணில் 60.90%, ஷேக்புராவில் 52.36%, சிவானில் 57.41%, வைஷாலியில் 59.45% வாக்குகள் பதிவாகி உள்ளன.

விவிஐபிக்கள் போட்டியிடும் தொகுதிகளான ரகோபூரில் 64.01%, மஹூவாவில் 54.88%, அலிநகரில் 58.05%, தாராபூரில் 58.33%, லக்கிசராயில் 60.51%, சாப்ராவில் 56.32%, பன்கிபூரில் 40%, புல்வாரியில் 62.14%, ரகுநாத்பூரில் 51.18%, சிவணில் 57.38%, மொகாமாவில் 62.16% வாக்குகள் பதிவாகி உள்ளன.

முதற்கட்ட தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் மற்றும் மாநில துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, 10-க்கும் மேற்பட்ட பாஜக மற்றும் ஜேடியு அமைச்சர்கள் களத்தில் இருந்தனர். இளம் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக - அலிகஞ்ச் தொகுதி) மற்றும் போஜ்புரி சூப்பர் ஸ்டார்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி - சாப்ரா தொகுதி) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் கட்சி - கர்கஹார் தொகுதி) ஆகியோரும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்டார்கள்.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகு​தி​களில் இன்று முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்றது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்​டங்​களை உள்​ளடக்​கிய இந்த தொகுதிகளில் மொத்​தம் 122 பெண்​கள் உள்​ளிட்ட 1,314 வேட்​பாளர்​கள் போட்​டி​யிட்டனர். வாக்​காளர்​கள் எண்​ணிக்கை 3.75 கோடி. மொத்​தம் 45,341 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

கடந்த 2020 தேர்​தலில், 121 -ல் மகா கூட்​டணி 61 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்​டிஏ) 59 மற்​றும் லோக் ஜன சக்தி ஒரு தொகு​தி​யில் வெற்றி பெற்​றிருந்​தது. இந்த 121 தொகு​தி​களில் மெகா கூட்​ட​ணி​யின் தலை​மைக் கட்​சி​யான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) மட்​டும் 42 தொகு​தி​களில் வென்​றிருந்​தது. இக்​கூட்​ட​ணி​யின் இதர உறுப்​பினர்​களான காங்​கிரஸ் 8 மற்​றும் இடது​சா​ரி​கள் 11 தொகு​தி​களைப் பெற்​றன. அதே​போல், பாஜக 32 மற்​றும் ஜேடியு 23 தொகு​தி​களில் 2020 தேர்தலில் வெற்றி பெற்​றன என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x