Published : 06 Nov 2025 07:06 AM
Last Updated : 06 Nov 2025 07:06 AM

ஆந்திராவில் 86 அணைகள்: முன்னாள் அமைச்சர் பெருமிதம்

திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திராவில் மறைந்த ஒய்​.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்​வ​ராக இருந்​த​போது, அவரது அமைச்​சர​வை​யில் நீர்​வளத்​துறை அமைச்​ச​ராக பணி​யாற்​றிய​வர் பொன்​னால லட்​சுமைய்யா (81).

தெலங்​கானா மாநிலம் பிரிந்த பின்​னர், காங்​கிரஸில் இருந்து பிரிந்து இவர் பிஆர்​எஸ் கட்​சி​யில் இணைந்​தார். இந்​நிலை​யில், தனது குடும்​பத்​தா​ருடன் திருப்​ப​திக்கு வந்த இவர், திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில், ஏழு​மலை​யான் கோயில் மற்​றும் காளஹஸ்தி சிவன் கோயில்​களில் தரிசனம் செய்​தார். அப்​போது, தான் எழு​திய 86 அணை​களின் ஜல யக்​ஞம் எனும் புத்​தகத்தை அவர் கோயில்​களில் வைத்து வழிபட்​டார்.

அமைச்சராக இருந்தபோது 86 அணை​கள் கட்​டியதை, ஒரு சாதனை​யாக அந்த புத்தகத்தில் கூறி​யுள்​ளார். தற்​போதைய ஆந்​திரா - தெலங்​கானா மாநிலங்​களில் உள்ள நீர்​வளம், நதிநீர் இணைப்​பு, நதி நீர் பிரச்​சினை​க்கான தீர்வு ஆகியவை குறித்து புத்​தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x