Published : 01 Nov 2025 08:41 AM
Last Updated : 01 Nov 2025 08:41 AM

சொத்து முடக்கத்துக்கு எதிரான கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி

புதுடெல்லி: ஐஎன்​எக்ஸ் மீடியா முறை​கேடு வழக்​கில் டெல்​லி​யில் உள்ள சொத்​துகளை​யும், வங்​கிக் கணக்​கை​யும் முடக்​கிய அமலாக்​கத் துறை நடவடிக்​கையை எதிர்த்​து, கார்த்தி சிதம்​பரம் பிஎம்​எல்ஏ மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மனுவை தீர்ப்​பா​யத்​தின் உறுப்​பினர்​கள் பலேஷ் குமார், ராஜேஷ் மல்​ஹோத்ரா அமர்வு விசா​ரித்​தது. அப்​போது, சொத்​துகளை முடக்கி 365 நாட்​களுக்கு மேல் தாமத​மாக குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​துள்​ள​து என கார்த்தி சிதம்​பரம் தரப்​பில் வாதிடப்​பட்​டது.

இதற்கு அமலாக்​கத் துறை, கரோனா தொற்று காலத்​தில் உச்ச நீதி​மன்​றம் விதி​விலக்கு அளித்​ததை சுட்​டிக்​காட்டி வாதிட்​டது. அமலாக்​கத் துறை​யின் வாதத்தை ஏற்​றுக் கொண்ட தீர்ப்​பா​யம், கார்த்தி சிதம்​பரத்​தின் மனுவை தள்​ளு​படி செய்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x