Published : 30 Oct 2025 02:49 AM
Last Updated : 30 Oct 2025 02:49 AM

இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்​களிடம், நல்ல வேலை, நல்ல சம்​பளம் என்று கூறி இராக்​குக்கு ஏஜெண்ட் ஒரு​வர் அழைத்​துச் சென்​றார்.

இந்​நிலை​யில் பஞ்சாப் பெண் ஒரு​வரை அங்​குள்​ளவர்​கள் சித்​ர​வதை செய்​த​தாகத் தெரி​கிறது. அங்கு சென்ற பின்​னர் வீட்டு வேலை செய்​யு​மாறு அங்​குள்​ளவர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தாக​வும், வேலை செய்ய மறுத்​தால் வீட்​டின் உரிமை​யாளர் அடித்​து, உதைத்​தும் கொடுமை செய்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில் பஞ்​சாபிலுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்​களவை எம்​.பி. பாப் பல்​பிர் சிங் செச்​சே​வாலை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்​பு​கொண்டு தன்னை மீட்​கு​மாறு அந்​தப் பெண் உதவி கோரி​னார்.

இதையடுத்து மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகத்​தைத் தொடர்பு கொண்ட பல்​பிர், விவரங்​களைத் தெரி​வித்து பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்​கு​மாறு கோரிக்கை விடுத்​தார்.

இதையடுத்து இராக்​கிலுள்ள இந்​திய தூதரகத்​தின் உதவி​யுடன் அந்​தப் பெண் மீட்​கப்​பட்டு கடந்த மாதம் 28-ம் தேதி இந்​தியா வந்து சேர்ந்​தார். இந்​நிலை​யில் அவர் அண்​மை​யில் பாப் பல்​பிர் சிங்கை சந்​தித்து நன்றி தெரி​வித்​தார்.

மேலும் அந்த டிராவல் ஏஜெண்ட் மூலம் இராக் சென்ற 20 முதல் 25 பெண்​கள் அங்கு சிக்​கிக் கொண்​டிருப்​ப​தாக​வும், அவர்​களை மீட்க நடவடிக்கை எடுக்​க வேண்​டும் என்​றும்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x