Published : 29 Oct 2025 06:41 AM
Last Updated : 29 Oct 2025 06:41 AM

8-வது ஊதியக் குழு தலைவர் நியமனம்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் திருத்​தம் செய்​வதற்​கான 8-வது ஊதி​யக் குழு உறுப்​பினர்​கள் நியமனத்​துக்கு அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. இக்​குழு 18 மாதங்​களில் தனது பரிந்​துரைகளை மத்​திய அரசிடம் சமர்ப்​பிக்​கும். மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யம் மறு ஆய்வு குறித்து ஆராய 8-வது ஊதி​யக் குழு அமைப்​ப​தற்கு பிரதமர் மோடி தலை​மையி​லான அமைச்​சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்​புதல் வழங்​கியது.

இந்​நிலை​யில், மத்​திய அமைச்​சகங்​கள், மாநில அரசுகள் மற்​றும் கூட்டு ஆலோ​சனைக் குழு ஆகிய​வற்​றுடன் கலந்​தாலோ​சித்த பிறகு, 8-வது ஊதி​யக் குழு​வின் செயல்​பாட்​டுக்​கான விதி​முறை​கள் (டிஓஆர்) இறுதி செய்​யப்​பட்​டன. இதற்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது என்று மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் செய்​தி​யாளர்​களிடம் அறி​வித்​தார்.

இதன்​படி 50 லட்​சம் மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்​தில் திருத்​தம் செய்​வது மற்​றும் 69 லட்​சம் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் சலுகை​களில் திருத்​தம் செய்​வது குறித்து இக்​குழு ஆய்வு செய்து பரிந்​துரை அளிக்​கும். 8-வது ஊதி​யக் குழு​வின் தலை​வ​ராக உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி ரஞ்​சனா பிர​காஷ் தேசாய் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இக்​குழு உறுப்​பின​ராக பெங்​களூரு பேராசிரியர் புலக் கோஷ் மற்​றும் உறுப்​பினர் - செயல​ராக பங்​கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ரஞ்​சனா பிர​காஷ் தேசாய் தலை​மையி​லான 8-வது ஊதி​யக் குழு, மத்​திய அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் ஊதி​யம் மற்​றும் சலுகைகள் குறித்து ஆய்வு செய்து 18 மாதங்​களில் தனது பரிந்​துரைகளை சமர்ப்​பிக்​கும்.

மத்​திய அரசு ஊழியர்​களின் ஊதி​யத்தை திருத்​தம் செய்​வதற்கு ஒவ்​வொரு 10 ஆண்​டுக்​கும் ஒரு முறை ஊதி​யக் குழுவை மத்​திய அரசு அமைக்​கிறது. அதன்​படி 7-வது ஊதி​யக் குழு கடந்த 2014-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் அமைக்​கப்​பட்​டது. அதன் பரிந்​துரைகளை மத்​திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமல்​படுத்​தி​யது. இந்​நிலை​யில், 8-வது ஊதி​யக் குழு​வின் பரிந்​துரைகளை மத்​திய அரசு 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்​படுத்த வேண்​டும்.

2028 முதல் அமலாகும்: ஆனால், 8-வது ஊதி​யக் குழு தனது பரிந்​துரைகளை 2027-ம் ஆண்​டின் முதல் காலாண்​டில் வழங்​கி​னால், 2028 முதல் காலாண்​டுக்​குள் அமலுக்கு வரும். எனினும், 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி​யிட்டு ஊதிய திருத்​தங்​கள் அமல்​படுத்​தப்​படும். அதன்​படி நிலுவை தொகையை மத்​திய அரசு ஊழியர்​கள், ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் பெறு​வார்​கள்.மேலும், பணவீக்​கத்​துக்கு ஏற்ப மத்​திய அரசு ஊழியர்​களுக்கு 6 மாதத்​துக்கு ஒரு முறை அகவிலைப் படி (டிஏ) மாற்​றி அமைக்​கப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x