Published : 29 Oct 2025 07:23 AM
Last Updated : 29 Oct 2025 07:23 AM

ஜெய்ப்பூர் | ஓட்டலில் பணம் தராமல் தப்பிய 5 பேர் நெரிசலில் சிக்கி கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மவுன்ட் அபு அருகில் உள்ள சியாவாவில் உள்ள 'ஹேப்பி டே' ஓட்டலுக்கு குஜராத்தை சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வந்தனர். அவர்கள் பல்வேறு அறுசுவை உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர். ஆனால் பில் தொகை ரூ.10,900-ஐ செலுத்தாமல், கழிப்பறைக்கு செல்வது போல் ஒருவர் பின் ஒருவராக உணவகத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.

இதற்கிடையில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டல் உரிமையாளரும் பணியாளரும் உணர்ந்தனர். அவர்களின் கார், குஜராத் - ராஜஸ்தான் எல்லையான அம்பாஜியை நோக்கி செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின.

இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் சுற்றுலாப் பயணிகளின் காரை துரத்திச் சென்றனர். குஜராத் எல்லையில் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பிறகு போலீஸார் உதவியுடன் 5 பேரும் அதே இடத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து, அவர் மூலம் ஆன்லைனில் ஓட்டல் பில்லை செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x