Published : 28 Oct 2025 10:06 AM
Last Updated : 28 Oct 2025 10:06 AM

தே.ஜ.கூட்டணி - ஜன் சுராஜ் இடையேதான் போட்டி: பிரசாந்த் கிஷோர் கருத்து 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி, ஜன் சுராஜ் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது என்று ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் தெரி​வித்​துள்​ளார்.

பல்​வேறு கால கட்​டங்​களில் பாஜக, காங்​கிரஸ், ஐக்​கிய ஜனதா தளம், ஆம் ஆத்​மி, திரிண​மூல் காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகளுக்கு பிர​சாந்த் கிஷோர் தேர்​தல் வியூ​கங்​களை வகுத்து கொடுத்​தார். கடந்த ஆண்டு அக்​டோபரில் அவர், ஜன் சுராஜ் என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இந்த கட்சி போட்​டி​யிடு​கிறது.

இதுதொடர்​பாக ஜன் சுராஜ் நிறு​வனர் பிர​சாந்த் கிஷோர் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் ஜன் சுராஜ் கட்​சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நில​வு​கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​டணி 3-வது இடத்​துக்கு தள்​ளப்​படும்.

மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாளர் தேஜஸ்வி யாதவ் அர்த்​தமற்ற வாக்​குறு​தி​களை அள்ளி வீசி வரு​கிறார். ராஷ்டிரிய ஜனதா தளத்​தின் தலை​வர் லாலு​வுக்கு மாற்​றாக ஐக்​கிய ஜனதா தளம், பாஜக கூட்​ட​ணிக்கு மக்​கள் வாக்​களித்​தனர். தற்​போது பிஹார் அரசி​யலில் ஜன் சுராஜ் கால் பதித்​திருக்​கிறது. இதன்​மூலம் பிஹாரில் புதிய வரலாறு எழுதப்​படு​கிறது.

பிஹார் அரசி​யலில் மிக நீண்ட கால​மாக குழப்​பம் நீடித்து வந்​தது. லாலு ஆட்​சியை விரும்​பாதவர்​கள் நிதிஷ் குமாருக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். பாஜக ஆட்​சியை விரும்​பாதவர்​கள் லாலு​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர். வரும் தேர்​தலில் ஜன் சுராஜுக்கு ஆதர​வாக மக்​கள் வாக்​களிக்க உள்​ளனர்.

பிஹார் இளைஞர்​கள் வேலை தேடி வெளி​மாநிலங்​களுக்கு செல்​லக்​கூ​டாது. சொந்த மாநிலத்​திலேயே அவர்​களுக்கு வேலை கிடைக்க வழி​வகை செய்​யப்​படும். தரமான கல்வி வழங்​கப்​படும். பிஹார் மக்​களின் வாழ்​வா​தா​ரம் மேம்​படுத்​தப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x