Published : 28 Oct 2025 07:17 AM
Last Updated : 28 Oct 2025 07:17 AM

போர் சூழலுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது:

கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான் உடன் நடை​பெற்ற நான்கு நாள் ராணுவ மோதல் எல்​லைகளில் எந்த நேரத்​தி​லும் எது​வும் நடக்​கலாம் என்​பதை நமக்கு கோடிட்டு காட்​டி​யுள்​ளது. இந்த சம்​பவம் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு போர் போன்ற சூழ்​நிலைக்கு எப்​போதும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும் என்​பதை உறு​திப்​படுத்​துகிறது.

ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானுக்கு இந்​தியா உறு​தி​யான பதிலடியை தந்​தது. இருந்​த​போ​தி​லும் தேசிய பாது​காப்பு சவால்​களை கையாள்​வ​தில் திட்​ட​மிடலுக்​கும், எதிர்​கால நடவடிக்​கையை கற்​றுக்​கொள்​வதற்​கும் இது ஒரு நல்ல பாட​மாக அமைந்​தது.

மே 7 முதல் 10 வரை மேற்​கொள்​ளப்​பட்ட பாகிஸ்​தானுக்கு எதி​ரான நடவடிக்​கை​யின்​போது உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ராணுவ உபகரணங்​களை நாம் திறம்பட பயன்​படுத்​தி​யது, பிராந்​திய மற்​றும் சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வின் நற்​பெயரை உயர்த்​தி​யது.

ஆபரேஷன் சிந்​தூர் சம்​பவ​மானது நமது எல்​லைகளில், எங்​கும், எந்த நேரத்​தி​லும் எது​வும் நடக்​கலாம் என்​பதை மீண்​டும் ஒரு முறை நமக்கு நினை​வுபடுத்​தி​யுள்​ளது.

எந்த நேரத்​தி​லும் எதிரி​களின் தாக்​குதலை சமாளிக்க நாம் நமது சொந்த அடித்தள கட்​டமைப்பை மட்​டுமே நம்​பி​யிருக்க வேண்​டும். தற்​போதைய உலகளா​விய நிச்​சயமற்ற தன்​மை​கள் ஒவ்​வொரு களத்​தை​யும் ஆழமாக மதிப்​பிட வேண்​டும் என்​பதை வலி​யுறுத்​துகின்​றன. சவால்​களை சமாளிக்க சுதேசிமய​மாக்​கல் மட்​டுமே ஒரே வழி.

உலக ஒழுங்கு கட்​டமைப்பு பலவீனமடைந்து வரு​கிறது. பிராந்​திய பகு​தி​களில் மோதல்​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இத்​தகைய சூழலில், இந்​தியா தனது பாது​காப்பு மற்​றும் வியூ​கத்தை மறு​வரையறை செய்​ய​வேண்​டியது அவசி​ய​மாகிறது.

சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, ஆகாஷ் ஏவு​கணை, பிரம்​மோஸ், ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கட்​டுப்​பாட்டு அமைப்​பு​கள் மற்​றும் இன்​னும் பிற உள்​நாட்டு உபகரணங்​களின் சக்​தியை உலகம் கண்டு வியந்​தது. இதற்​கான பெருமை அனைத்​தும் நமது ராணுவத்​தையே சாரும்.

பாது​காப்பு உற்​பத்​தியை மேம்​படுத்​து​வதற்​கும், உள்​நாட்டு சுற்​றுச்​சூழல் அமைப்பை வலுப்​படுத்​து​வதற்​கும் அரசு ஒரு சமமான களத்தை உரு​வாக்கி வரு​கிறது. இந்த வாய்ப்பை தொழில்​துறை​யினர் முழு​மை​யாக பயன்​படுத்​திக்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு ராஜ்​நாத்​ சிங்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x