Published : 27 Oct 2025 08:12 AM
Last Updated : 27 Oct 2025 08:12 AM

பிளாஸ்டிக் கழிவுக்கு உணவு பெறும் திட்டம்: சத்தீஸ்கரின் முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் பாராட்டு

புதுடெல்லி: பிளாஸ்​டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் வகை​யில் சத்​தீஸ்​கர் அரசு எடுத்​துள்ள முன்​முயற்​சிக்கு மன்கி பாத் உரை​யில் பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

மாதம் தோறும் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை பிரதமர் மோடி வானொலி வழி​யாக நாட்டு மக்​களிடம் உரை​யாற்றி வரு​கிறார். அந்த வகை​யில் நேற்​றைய 127-வது மன் கி பாத் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​ய​தாவது:

சூரிய கடவுளுக்கு மரி​யாதை செலுத்​தும் சாத் பூஜை இந்​தி​யா​வின் சமூக ஒற்​றுமைக்கு ஒரு அழகான எடுத்​துக்​காட்​டு. இந்​தி​யா​வின் கலாச்​சா​ரம், இயற்கை மற்​றும் சமூகத்​தின் ஆழமான ஒற்​றுமை ஆகிய​வற்றை இந்த பண்​டிகை பிர​திபலிப்​ப​தாக உள்​ளது. இது, சமூகத்​தின் அனைத்து பிரிவு மக்​களை​யும் ஒன்​றிணைக்​கிறது.

ஆபரேஷன் சிந்​தூர்: நமது ராணுவம் ஆபரேஷன் சிந்​தூரில் பெற்ற வெற்றி நாட்டு மக்​களை பெரு​மை​யால் நிரப்​பி​யுள்​ளது. அதேபோன்று நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கைகளில் அரசின் முயற்சி பாரட்​டத்​தக்​கது. ஒரு காலத்​தில் மாவோ​யிஸ்ட் இருள் சூழ்ந்த பகு​தி​களில் கூட தற்​போது மகிழ்ச்​சி​யின் விளக்​கு​கள் ஒளிவீச தொடங்​கி​யுள்​ளது.

சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் புது​மை​யான முயற்​சியை சத்​தீஸ்​கர் அரசு எடுத்​துள்​ளது. அதற்​காக ‘‘குப்பை கஃபே’’ வை அமைத்​துள்​ளது. அங்கு குடிமக்​கள் உணவுக்​காக பிளாஸ்​டிக் கழி​வு​களை பரி​மாறிக் கொள்​ளலாம். அம்​பி​காபூர் நகராட்​சி​யால் நடத்​தப்​படும் இந்த கஃபே​வில் யாராவது ஒரு கிலோ பிளாஸ்​டிக் கழிவை கொண்டு வந்து தந்​தால் மதிய உணவு தரப்​படும். அரை கிலோ பிளாஸ்​டிக் கழிவை கொண்டு வந்​தால் அவர்​களுக்கு காலை உணவு வழங்​கப்​படும். இது, நமது பூமிப்​பந்தை பாது​காக்க எடுக்​கப்​பட்ட மிகச்​சிறந்த முன்​முயற்​சி.

இதேபோன்​று, இயற்​கையை பாது​காக்​கும் வகை​யில் அகம​தா​பாத் அருகே உள்ள தோலேரா கடற்​கரை பகு​தி​யில் சதுப்பு நிலத் தோட்​டங்​களை விரிவுபடுத்​தி​யதற்​காக குஜ​ராத் வனத் துறை பணி​யும் பாராட்​டு​தலுக்​குரியது. ஐந்து ஆண்​டு​களுக்கு முன்பு தொடங்​கிய இந்த பணி​யால் இன்று தோலேரா கடற்​கரை​யில் மூன்​றரை ஆயிரம் ஹெக்​டேர் பரப்​பள​வில் சதுப்பு நிலங்​கள் பரவி​யுள்​ளன.

ஐந்து ஆண்​டு​களுக்கு முன்பு நான் விடுத்த கோரிக்​கையை ஏற்று பிஎஸ்​எப் மற்​றும் சிஆர்​பிஎப் படைகளில் இந்​திய நாய் இனங்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

150-வது பிறந்​த​நாள்: அக்​டோபர் 31-ம் தேதி சர்​தார் வல்​லப​பாய் படேலின் 150-வது பிறந்​த​நாள் கொண்​டாடப்பட உள்​ளது. நவீன காலத்​தில் நாட்​டின் மிச்​சிறந்த அறி​வாளி​களில் ஒரு​வர் அவர்.

அதேபோன்​று, நவம்​பர் 15-ம் தேதி ஜனஜா​திய கவுரவ் திவாஸை ஒட்டி பழங்​குடி​யின தலை​வரும் சுதந்​திர போ​ராட்ட வீரரு​மான பிர்சா முண்​டாவுக்கு மரி​யாதை செலுத்​துகிறேன். நாட்​டின் சுதந்​திரத்​துக்​காக​வும், பழங்​குடி சமூகத்​தின் உரிமை​களுக்​காக​வும் அவர் செய்த பணி ஈடு இணை​யற்​றவை. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x