Published : 27 Oct 2025 06:55 AM
Last Updated : 27 Oct 2025 06:55 AM

இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு இது: உச்சி மாநாட்டில் காணொலியில் பங்கேற்ற பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: 21-ம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் நேற்று தொடங்​கியது. இதன் ஒரு பகு​தி​யாக ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பேசி​ய​தாவது: உலக மக்​கள் தொகை​யில் நான்​கில் ஒரு பகுதி மக்​கள் இந்​தி​யா, ஆசி​யான் நாடு​களில் வசிக்​கின்​றனர். இந்​தி​யா, ஆசி​யான் நாடு​கள் இடையே ஆழமான நட்​புறவு நீடிக்​கிறது. கலாச்​சார​ரீ​தி​யாக நாம் ஒரே பாதை​யில் பயணம் செய்​கிறோம்.

இந்​தி​யா​வின் கிழக்​கத்​திய கொள்​கை​யின்​படி ஆசி​யான் நாடு​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த கூட்​டமைப்​பின் ஒத்​துழைப்​பால் இந்​திய, பசிபிக் பெருங்​கடல் பகு​தி​யில் சுதந்​திர​மான கடல் போக்​கு​வரத்தை உறுதி செய்ய முடி​யும். குளோபல் சவுத் கூட்​டமைப்​பில் இந்​தி​யா​வும் ஆசி​யான் நாடு​களும் உறுப்​பினர்​களாக உள்​ளன. வணி​கரீ​தி​யாக மட்​டுமன்றி கலாச்​சா​ரரீ​தி​யாக​வும் நாம் இணைந்​திருக்​கிறோம்.

உணவு பாது​காப்பை உறுதி செய்​வ​தி​லும் பரு​வநிலை மாறு​பாட்டை தடுப்​ப​தி​லும் இந்​தி​யா, ஆசி​யான் அமைப்பு ஒன்​றிணைந்து செயல்​பட்டு வரு​கின்​றன. பேரிடர் காலங்​களி​லும் இரு தரப்​பும் பரஸ்​பரம் உதவி செய்து வரு​கின்​றன. கல்​வி, சுற்​றுலா, அறி​வியல், தொழில்​நுட்​பம், சுகா​தா​ரம், பசுமை எரிசக்​தி, சைபர் பாது​காப்பு ஆகிய துறை​களி​லும் இணைந்து செயல்​படு​கின்​றன.

21-ம் நூற்​றாண்டு இந்​தி​யா, ஆசி​யான் அமைப்​பின் நூற்​றாண்டு ஆகும். வரும் 2045-ம் ஆண்​டுக்​கான ஆசி​யான் அமைப்​பின் தொலைநோக்கு திட்​டங்​கள் நிச்​சய​மாக நிறைவேறும். இதே​போல வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யா​வும் உரு​வாகும். நாம் தோளோடு தோள் நின்று வெற்​றிப் பயணத்தை தொடர்​வோம்.
இவ்​வாறு அவர் பேசி​னார்.

ஆசி​யான் உச்சி மாநாடு மற்​றும் ஆசி​யான் - இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி ஆண்​டு​தோறும் பங்​கேற்​பது வழக்​கம். ஆனால் முதல்​முறை​யாக அவர் மாநாட்​டில் பங்​கேற்​க​வில்​லை.

கோலாலம்​பூரில் நேற்று தொடங்​கிய உச்சி மாநாட்​டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பங்​கேற்​றார். வரி​வி​திப்பு விவ​காரம் தொடர்​பாக இந்​தி​யா, அமெரிக்கா இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்ட பிறகு அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி சந்​திக்க முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இதன்​காரண​மாகவே பிரதமர் மோடி​யின் மலேசிய பயணம் ரத்து செய்​யப்​பட்​டது என்​று டெல்​லி வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x