Published : 27 Oct 2025 06:51 AM
Last Updated : 27 Oct 2025 06:51 AM

சிராக் பஸ்வானுக்கு அதிகார பசி: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

சிராக் பஸ்​வான், தேஜஸ்வி யாதவ்

பாட்னா: லோக் ஜனசக்தி கட்​சி​யின் (எல்​ஜேபி) தலை​வர் சிராக் பஸ்​வானுக்கு அதி​கார பசி அதி​க​மாக உள்​ளது என்று ராஷ்டிர ஜனதா தளத்​தின் (ஆர்​ஜேடி) தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் தேர்​தலில் எதிர்க்​கட்​சிகள் அமைத்துள்ள மெகா கூட்​ட​ணி​யில் முதல்​வர் வேட்​பாள​ராக உள்​ளவர் தேஜஸ்வி யாதவ். கடந்த 2005-ம் ஆண்டு பிஹாரில் ஒரு முஸ்​லிமை முதலமைச்​ச​ராக்க தனது தந்தை விரும்​பிய​தாக​வும், ஆனால், ஆர்​ஜேடி அதற்கு உடன்​பட​வில்லை எனவும் சிராக் பஸ்​வான் குற்​றம்​சாட்​டி​யிருந்​தார்.

இதற்கு தேஜஸ்வி யாதவ் அளித்த பதிலில் ‘‘சிராக் பஸ்​வான் என்ன சொல்​கிறார் அல்​லது சொல்​ல​வில்லை என்​பது தற்​போது முக்​கியமல்ல. அவருடைய தொலைநோக்கு தி்ட்​டம்​தான் என்ன. ஆளும் என்​டிஏ கூட்​ட​ணி​யில் இருப்​பதை பஸ்​வான் அசவு​கரிய​மாக உணர்​கிறார்.

ராம் விலாஸ் பஸ்​வான் இறந்த பிறகு சிராக் பஸ்​வானுக்​கும் அவரது உறவினரும் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தலை​வரு​மான பசுபதி குமார் பராஸுக்​கும் இடையே மோதல் ஏற்​படு​வதற்கு என்​டிஏ கூட்​ட​ணி​யினர்​தான் காரணம். சிராக் அதி​கார பேராசை​யால் என்​டிஏவுடன் கூட்​டணி சேர்ந்து உள்​ளார். அவர் அதி​காரத்​துக்​காக அனைத்​தை​யும் சமரசம் செய்து கொள்​கிறார். அதனால்​தான் அவரது கருத்​துகளை முக்​கிய​மான​தாக எடுத்​துக்​கொள்ள வேண்​டிய அவசி​யமில்​லை’’ என்​றார்.

அடுத்த மாதம் நடை​பெற​விருக்​கும் தேர்​தலில் ஒரு முஸ்​லி​முக்கு முதல்​வர் அல்​லது துணை முதல் பதவி வழங்க ஆர்​ஜேடி தயா​ராக இல்லை என்று சிராக் கூறியதையடுத்து தேஜஸ்​வி இந்​த கருத்​தை தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x