Published : 26 Oct 2025 07:11 AM
Last Updated : 26 Oct 2025 07:11 AM

சவுதி பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு: பிரதமர் உதவ வேண்டும் என வேண்டுகோள் 

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர், சவுதி அரேபி​யா​வில் வேலை பார்க்க சென்​றுள்​ளார். அவருக்கு பாலை​வனத்​தில் ஒட்​டகம் மேய்க்​கும் வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வேலை மிக​வும் சிரம​மாக உள்​ள​தால் அவர் தாய்​நாடு திரும்ப விரும்​பு​கிறார். ஆனால், அவரது முதலாளி கபில் என்​பவர், தொழிலா​ளி​யின் பாஸ்​போர்ட்டை வாங்கி வைத்​துக்​கொண்​டு, கொன்​று​விடு​வ​தாக மிரட்​டி​யுள்​ளார். அந்த இளைஞர் சமூக ஊடகத்​தில் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர், ‘‘எனது கிராமம் அலகா​பாத். நான் வேலை பார்க்க சவுதி அரேபியா வந்​தேன். எனது பாஸ்​போர்ட் கபில் என்​பவரிடம் உள்​ளது. நான் வீட்​டுக்கு போக வேண்​டும் என அவரிடம் கூறினேன். ஆனால், அவர் என்னை கொன்​று​விடு​வ​தாக மிரட்​டு​கிறார். நான் என் அம்​மா​விடம் செல்ல விரும்​பு​கிறேன். எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து​விடு​வேன்’’ என உருக்​க​மாக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது. இதையடுத்து சவுதி தலைநகர் ரியாத்​தில் உள்ள இந்​திய தூதரகம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘நாடு திரும்ப வேண்​டு​கோள் விடுத்த உ.பி. இளைஞரை கண்​டு​பிடிக்க முயற்​சிக்​கிறோம். அவர் சவுதி அரேபி​யா​வில் எங்கு பணி​யாற்​றுகிறார், தொலைபேசி எண், முதலாளி யார்? என்ற விவரம் வீடியோ​வில் இல்​லை’’ என தெரி​வித்​துள்​ளது.

சவுதி அரேபி​யா​வில் வெளி​நாட்டு தொழிலா​ளர்​களை உள்​ளூர் நபரின் கட்​டுப்​பாட்​டில் பணி​யமர்த்​தும் முறை ஒழிக்​கப்​படு​ம், தொழிலா​ளர் உரிமை​கள் மேம்​படுத்​தப்​படும் என அந்நாட்டு அரசு சமீபத்​தில் அறி​வித்​தது. இந்​நிலை​யில்​ இந்​த வீடியோ வெளி​யாகி​யுள்​ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x