Last Updated : 24 Oct, 2025 08:18 AM

1  

Published : 24 Oct 2025 08:18 AM
Last Updated : 24 Oct 2025 08:18 AM

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயிலில் தலைப்பாகை அணிவதில் பூசாரிகள் மோதல்

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்​ளது. இங்கு நேற்​று ​முன்தினம் காலை தலைப்​பாகை அணிவ​தில் 2 பூசா​ரி​களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்​டது. இதுகுறித்து கோயில் நிர்​வாகம் விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது.

சம்​பவத்​தில் ரிம்​முக்​தேஷ்வர் கோயில் தலை​வர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்​கர் நாத்​துடன் பூஜை செய்ய கரு​வறைக்கு வந்​தார். அப்​போது மகாவீர் நாத் பாரம்​பரிய தலைப்​பாகை அணிந்​திருந்​தார். அதைப் பார்த்த அங்​கிருந்த பூசாரி மகேஷ் சர்​மா, தலைப்​பாகையை அகற்​றும்​படி தெரி​வித்​தார். மகா​காலேஷ்வருக்கு முன்பு தலைப்​பாகை அணிவது கோயில் மரபுக்கு எதி​ரானது என்று கூறி​னார். இதற்கு மகாவீர் நாத் மறுத்​த​தால் இரு​வருக்​கும் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், பூசாரி மகேஷ் சர்மா தனது தலைப்​பாகையை வலுக்​கட்​டாய​மாக அகற்ற முயன்​ற​தாக​வும், சக துற​வியைத் தள்​ளி​விட்​ட​தாக​வும் மகாவீர் நாத் குற்​றம் சாட்​டி​னார். அதற்​கு, பூசாரி மகேஷ் சர்மா தன்னை தாக்க வந்​தமை​யால் தற்​காப்​புக்​காக இதை செய்​த​தாகப் பதிலளித்​துள்​ளார்.

இதுகுறித்து துறவி​கள் சிலர் ஆசிரமத்​தில் கூடி, பூசாரி மகேஷ் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்​கக் கோரினர். பர்த்​ரிஹரி குகை​களின் தலைமை பூசாரி பீர் மஹந்த் ராம்​நாத், கோயில் நிர்​வாகம் கரு​வறை​யின் சிசிடிவி காட்​சிகளை பொது​மக்​களுக்கு வெளி​யிட வேண்​டும் என்று கோரி​னார்.

இதுகுறித்து கோயில் தலைமை நிர்வாகி பிரதம் கவுசிக் கூறுகையில், ‘‘சிசிடிவி காட்சிகள் மற்றும் இரு தரப்பினரின் அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம். உண்மை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x