Published : 24 Oct 2025 07:45 AM
Last Updated : 24 Oct 2025 07:45 AM
ருத்ரபிரயாக்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயில் அமைந்துள்ளது.
சார்தாம் யாத்திரையின் ஒரு அங்கமான இந்த கோயில் ஆண்டுதோறும் கோடை காலத்தின் தொடக்கத்தில் திறக்கப்பட்டு குளிர்காலத்தின் தொடக்கத்தில் மூடப்படும். அந்த வகையில், குளிர்காலம் தொடங்க உள்ளதால் கேதார்நாத் கோயில் நடை நேற்று அடைக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கோயில் நிர்வாகக் குழு அதிகாரிகள், அர்ச்சகர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கோயில் நடை அடைக்கப்பட்டதையடுத்து, இனி பகவான் கேதார்நாத், குளிர்கால இல்லமான உகிமத்தில் உள்ள ஓம் காரேஷ்வர் கோயிலில் அருள் பாலிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT