Published : 22 Oct 2025 08:15 AM 
 Last Updated : 22 Oct 2025 08:15 AM
திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 3 நாட்களாக ஓயாமல் மழை பெய்து வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்த பக்தர்கள் அறைகளிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மலைப்பாதையில் 15-வது வளைவில் நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் சாலையில் வந்து விழுந்தன. எனினும் இதில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT