Published : 11 Oct 2025 12:13 AM
Last Updated : 11 Oct 2025 12:13 AM

கரூர் சம்பவ வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரித்தது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம்

புதுடெல்லி: கரூர் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பான வழக்கை மதுரை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், தவெக தரப்​பில் தொடரப்​பட்​டுள்ள இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​தனர்.

கரூரில் தவெக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசி​யல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​கோரி வில்​லி​வாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. தவெக தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் கோபால் சுப்​ரமணி​யம், சி.ஆர்​யமா சுந்​தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.

இந்த வழக்​கில் சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து தனி நீதிபதி உத்​தர​விட்​டுள்​ளார். வழக்​கில் தொடர்​பில்​லாத விஜய் சம்பவ இடத்​தில் இருந்து பொறுப்​பற்ற முறை​யில் ஓடி​விட்​ட​தாக கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். தவெக தரப்​பில் வாதங்​களை முன்​வைக்க வாய்ப்​பும் அளிக்​க​வில்​லை. சட்​டம் - ஒழுங்கு பிரச்​சினையை காரணம் காட்டி போலீ​ஸார் தான் அந்த இடத்தை விட்டு செல்​லும்​படி விஜய்க்கு உத்​தர​விட்​டனர். பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு உதவும் வாய்ப்பு கிடைக்​க​வில்​லை.

தனி நீதிப​தி​யின் உத்​தரவு தவெக-​வின் அரசி​யல் எதிர்​காலத்​துக்கு பாதிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்த வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரித்து உத்​தர​விட்​டுள்ள நிலை​யில், அதே காரணத்​துக்​காக தொடரப்​பட்ட வழக்கை சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்து தனி​யாக சிறப்பு புல​னாய்​வுக் குழுவை அமைத்து உத்​தர​விட்டு இருப்​பது தவறான நடை​முறை. எனவே உச்ச நீதி​மன்​றமே ஓய்​வு​பெற்ற நீதிபதி தலை​மை​யில்
சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்க வேண்​டும். இவ்​வாறு வாதிட்​டனர்.

இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்த தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, பி.​வில்​சன், அபிஷேக் மனு சிங்வி வாதிட்​டனர். உயி​ரிழப்பு சம்​பவத்​தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்​துள்​ளது. முதல்​வர் உடனடி​யாக கரூருக்கு சென்று உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​துக்கு ஆறு​தல் தெரி​வித்​தும், காயமடைந்​தவர்​களுக்கு உடனடி சிகிச்​சைக்​கும் நடவடிக்கை எடுத்​துள்​ளார். உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஏற்​கெனவே சிபிஐ-​யில் பணி​யாற்​றிய நேர்​மை​யான அதி​காரி​யான வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு விசா​ரணைக்​குழு தனது விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளது.

கூட்​டங்​களை முறைப்​படுத்​தக்​கோரி வழி​காட்டு விதி​முறை​களை வகுக்​கக்​கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில், அதுதொடர்​பான கோரிக்​கையை உயர் நீதி​மன்ற மதுரை கிளை விசா​ரிக்​க​வில்​லை. விஜய் 7 மணி நேரம் தாமத​மாக கரூருக்கு வந்​த​தால்​தான் இந்த துயரச்​சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. இதற்கு விஜய் மட்​டுமே தார்​மீகரீ​தி​யாக பொறுப்​பேற்க வேண்​டும். அதை​விடுத்து போலீ​ஸார் மீது குற்​றம்​சாட்டி அரசி​யல் சாயம் பூசக்​கூ​டாது. இவ்​வாறு வாதத்​தில் தெரி​வித்​தனர்.

அப்​போது நீதிப​தி​கள், கரூர் கூட்ட நெரிசல் தொடர்​பான வழக்கை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது, சென்னை உயர் நீதி​மன்​றத்​தி்ல் தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் எனவும், இந்த இரு உத்​தர​வு​களும் ஒன்​றுக்​கொன்று முரண்​பா​டாக உள்ளன என்​றும், ஒரே​நாளில் வெவ்​வேறு உத்​தர​வு​கள் பிறப்​பித்​தது எப்​படி என்​றும் கேள்வி எழுப்​பினர்.

கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த சிறு​வனின் தந்தை பன்​னீர்​செல்​வம் தரப்​பிலும் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள், ‘‘கரூர் சம்​பவத்​துக்கு போலீ​ஸாரின் அஜாக்​கிரதையே காரணம். இரவோடு இரவாக 41 உடல்களுக்கும் பிரேத பரிசோதனை நடத்தி முடிக்​கப்​பட்​டது. ஒரு​புறம் தனி நபர் ஆணை​யம், மறு​புறம் சிறப்பு புல​னாய்​வுக்​குழு விசா​ரணை என தெளிவற்ற நிலை​யில் விசா​ரணை செல்​கிறது. செயற்கை மின்​தடை, சமூக விரோ​தி​களின் குழப்​பம் காரண​மாக பலர் இறந்​துள்​ளனர். ஆளுங்​கட்​சி​யைச் சேர்ந்த முக்​கிய நபர் ஒரு​வருக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. எனவே​தான் சிபிஐ விசா​ரணை கோரு​கிறோம்” என்​றனர்.

தீர்ப்பு தள்ளிவைப்பு: அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள்,இறந்த 41 பேரது உடல்​களை உடனடி​யாக பிரேத பரிசோதனை செய்​தது எப்​படி என கேள்வி எழுப்​பினர். அதற்கு தமிழக அரசுதரப்​பில் நிலை​மை​யைக் கருத்​தில் கொண்டு பக்​கத்து மாவட்​டங்​களில் இருந்​தும் மருத்​து​வர்​கள் வரவழைக்​கப்​பட்டு பிரேத பரிசோதனை நடத்​தப்​பட்​டது என தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து இந்த வழக்​கில் தமிழக அரசு தரப்​பில்​ பிர​மாணப் பத்​திரம்​ தாக்​கல்​ செய்​ய உத்​தர​விட்​டு, தீர்ப்​பை தேதி குறிப்​பி​டா​மல்​ தள்​ளிவைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x