Published : 09 Oct 2025 07:02 AM
Last Updated : 09 Oct 2025 07:02 AM

ஆந்திராவில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு

கோனசீமா: ஆந்​தி​ரா​வில் உள்ள பட்​டாசு கிடங்​கில் ஏற்​பட்ட வெடி​விபத்​தில் 6 தொழிலா​ளர்​கள் உடல் கருகி உயி​ரிழந்​தனர். 30 பேர் காயமடைந்துள்​ளனர்.

ஆந்​திர மாநிலம், டாக்​டர். பிஆர் அம்​பேத்​கர் கோனசீமா மாவட்​டத்​தில் உள்ள ராய​வரம் பகு​தி​யில் பட்​டாசு தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு 40 தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வந்​தனர். இந்​நிலை​யில் தீபாவளி பண்​டிகை நெருங்​கு​வ​தால் இறுதி கட்ட பணி​கள் நடை​பெற்று வந்​தன.

இதனிடையே, நேற்று காலை பட்​டாசு கிடங்​கில் பயங்கர சத்​தத்​துடன் தீ விபத்து ஏற்​பட்​டது. அந்த சமயத்​தில் ஆலை​யில் 40 பேர் பணி​யாற்றி கொண்​டிருந்​த​தாக கூறப்​படு​கிறது.

சில நிமிடங்​களி​லேயே நெருப்​பும் கொழுந்​து​விட்டு எரிந்​தது. உடனடி​யாக தீயணைப்பு படை, போலீ​ஸாருக்கு அப்​பகு​தி​யினர் தகவல் கொடுத்​தனர். தகவலின் அடிப்​படை​யில், இரு துறை​யினரும் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து தீயை அணைத்​தனர்.

பட்​டாசு ஆலை​யில் தீவிபத்து ஏற்​பட்​டதும் அங்​குள்ள சுவர் இடிந்து விழுந்​துள்​ளது. இதற்​கடி​யில் பலர் சிக்கி கொண்​டனர்.
இவர்​களை மீட்டு வனபர்த்தி அரசு மருத்​து​வ​மனைக்​கும், சிலரை தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும் அனுப்பி வைத்​தனர். இந்த கோர தீ விபத்​தில் 4 பெண்​கள் உட்பட 6 பேர் உயி​ரிழந்​தனர்.

10-க்​கும் மேற்​பட்​டோர் படு​காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வ​தாக​வும், 20-க்​கும் மேற்​பட்​டோர் லேசான தீக்​கா​யம் அடைந்​துள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது குறித்து ராய​வரம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தகவல் அறிந்த ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, அதி​காரி​களிடம் நடந்த விபத்து குறித்து கேட்​டறிந்​தார். உடனடி​யாக உள்​துறை அமைச்​சர் அனி​தாவை சம்பவ இடத்​துக்கு செல்​லும்​படி உத்​தர​விட்​டார். மேலும், காயமடைந்​தவர்​களுக்கு உயரிய சிகிச்சை அளிக்​கும்​படி மாவட்ட ஆட்​சி​யர்​ மகேஷ்கு​மாருக்​கு உத்​தர​விட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x