Published : 09 Oct 2025 12:49 AM
Last Updated : 09 Oct 2025 12:49 AM

நவி மும்பையில் 1,160 ஹெக்டேரில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு: தொடங்கி வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார்

மும்பை: நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார். இந்த விமான நிலை​யம் அதானி குழு​மத்​தால் பொது தனி​யார் கூட்​டாண்மை (பிபிபி) மாதிரி​யின்கீழ் கட்​டப் பட்​டுள்​ளது. இங்கு வரும் டிசம்​பர் மாதம் முதல் உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச பயணி​களுக்​கான சேவை தொடங்​க உள்​ளது.

விமான நிலை​யத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசி​ய​தாவது: மும்​பை​யில் பயணம் மற்​றும் இணைப்பை மாற்​றி அமைப்​ப​தில் நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் முக்​கிய பங்​காற்​றும். மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள விவ​சா​யிகளை மத்​திய கிழக்கு மற்​றும் ஐரோப்​பிய சந்​தைகளு​டன் இணைப்​ப​தன் மூலம் இந்த விமான நிலை​யம் பொருளா​தார வாய்ப்​பு​களை மேம்​படுத்​தும். இது, ஆசி​யா​வின் மிகப்​பெரிய இணைப்பு மைய​மாக உரு​வெடுக்​கும்.

இன்று மும்பை முழு​வதும் எளி​தாக பயணிக்க வசதி​யாக இந்த நகரம் முழு​மை​யான நிலத்​தடி மெட்​ரோவை கொண்​டுள்​ளது. கட்​டு​மான நெருக்​கம் மிகுந்த மும்பை போன்ற ஒரு நகரத்​தில் நிலத்​தடி மெட்​ரோவை தொடங்​கு​வது ஒரு பெரிய சாதனை.

நவி மும்பை சர்​வ​தேச விமான நிலைய திட்​டம் விக்​சித் பாரத்தை பிர​திபலிக்​கும் ஒரு திட்​டம் ஆகும். கடந்த 2014-ம் ஆண்​டில், இந்​தி​யா​வில் 74 விமான நிலை​யங்​கள் இருந்​தன. இப்​போது நம்​மிடம் 160-க்கும் மேற்​பட்ட விமான நிலை​யங்​கள் உள்​ளன. இவ்​வாறு பிரதமர் மோடி பேசினார்.

முக்​கிய அம்​சங்​கள்: நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் (என்​எம்​ஐஏ) முதல் கட்ட பணி​கள் ரூ.19,650 கோடி முதலீட்​டில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய இந்த கிரீன்​ஃபீல்டு விமான நிலைய திட்​டம், சத்​ரபதி சிவாஜி மகா​ராஜ் சர்​வ​தேச விமான நிலை​யத்​துடன் இணைந்து செயல்​படும். நெரிசலை குறைத்து, பல விமான நிலை​யங்​களைக் கொண்ட உலகளா​விய நகரங்​களில் மும்​பையை முக்​கிய புள்​ளி​யாக இது நிலைநிறுத்​தும்.

நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் 1,160 ஹெக்​டேர் பரப்​பளவை கொண்​டுள்​ளது. இந்த விமான நிலை​யம் முழு​மை​யாக கட்டி முடிக்​கப்பட்டதும், ஆண்​டுக்கு 90 மில்​லியன் பயணி​களைக் கையாளும். அத்​துடன் 3.25 மில்​லியன் மெட்​ரிக் டன் சரக்​கு​களை​யும் கையாளும் அளவுக்கு திறன் அதி​கரிக்​கும்.

நவி மும்பை சர்​வ​தேச விமான நிலை​யம் தற்​போது ஒரு முனைய அமைப்புடன் ஒற்றை ஓடு​பாதையை கொண்டு செயல்​படும். இதன்மூலம், ஆண்​டுக்கு 20 மில்​லியன் பயணி​களுக்கு சேவை செய்​யும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

விமான நிலைய உள்​கட்​டமைப்பு ஆரம்​பத்​தில் மணிக்கு 20-22 விமானங்​களை நிர்​வகிக்​கும். அடுத்த ஆண்டு இந்த திறனை விரிவுபடுத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​படும். முதல் முனை​யம் திறக்​கப்​பட்ட 12-15 மாதங்​களுக்​குள் அதன் அதி​கபட்​ச செயல்​பாட்​டு திறனை எட்​டும்​ என்​று எதிர்​பார்க்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x