Published : 08 Oct 2025 07:14 AM
Last Updated : 08 Oct 2025 07:14 AM
டேராடூன்: உத்தராகண்டில் மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு மாற்றாக சிறுபான்மையினர் கல்வி மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியுடன் மதரஸா கல்வி வாரிய சட்டம் காலாவதியாகிறது.
இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர் கல்வி மசோதா, சட்டமாகி உள்ளது. புதிய சட்டத்தின்படி சிறுபான்மையினர் கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையமே சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
புதிய சட்டம் குறித்து உத்தராகண்ட் அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிதாக அமைக்கப்பட உள்ள சிறுபான்மையினர் கல்வி ஆணையத்தில் 12 நிபுணர்கள் இடம்பெறுவார்கள். இது சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும். மாநிலம் முழுவதும் செயல்படும் மதரஸாக்கள் வரும் கல்வியாண் டில் புதிதாக அங்கீகாரம் பெற வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT