Published : 07 Oct 2025 06:49 AM
Last Updated : 07 Oct 2025 06:49 AM

ஹைதராபாத் | பண்ணை வீட்டில் ‘கஞ்சா’ பார்ட்டி வைத்த 6 பேர் கைது

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷான், கனடா நாட்​டில் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனால், அவர் தனது நண்​பர்​களுக்கு ‘பார்ட்​டி’ கொடுக்க நினைத்​தார். இது தொடர்பாக அழைப்பு விடுத்​தார். இந்த பார்ட்​டிக்கு தனித்து வரு​வோர் ரூ.1600, ஜோடி​யாக வரு​வோர் ரூ.2800 பணம் செலுத்த வேண்​டும் எனவும் குறிப்​பிட்​டிருந்​தார்.

இதனை பார்த்​து, மொயி​னா​பாத்​தில் உள்ள ஒரு பண்ணை வீட்​டில் ஏற்​பாடு செய்​திருந்த ‘பார்ட்​டி’ க்கு மொத்​தம் 59 பேர் வந்​திருந்​தனர். இதில் 22 பேர் மைனர்​ ஆவர். இந்த பார்ட்​டிக்கு கடந்த 4-ம் தேதி, இளம் பெண்​களும் தங்​களின் காதலர்​களு​டன் வந்​திருந்​தனர். பார்ட்​டி​யும் அன்று மாலை களை கட்​டியது.

வெளி​நாட்டு மது​பானங்​கள், டிஜே என ஆட்​டம், பாட்​ட​மாக போய் கொண்​டிருந்​த​போது, அதே சமூக வலைத்​தளம் மூலம் தகவல் அறிந்த போலீ​ஸார் பண்ணை வீட்​டில் அதிரடி ரெய்டு நடத்​தினர். அப்​போது 6 வெளி​நாட்டு மது​பான பாட்​டில்​கள், கஞ்சா பொட்​டல​ங்​கள் போன்​றவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்​பாக 6 பேரை ஹைத​ரா​பாத்​ போலீ​ஸார்​ நேற்​று கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x