Published : 07 Oct 2025 07:42 AM
Last Updated : 07 Oct 2025 07:42 AM
திருப்பதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திருப்பதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான நாராவாரி பல்லியில் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்காக, இன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்க உள்ளார்.
இந்நிலையில், இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று காலையில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT