Published : 06 Oct 2025 06:37 AM
Last Updated : 06 Oct 2025 06:37 AM

இந்தியா வருகிறார் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர்

புதுடெல்லி: கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் பிரதமர் மோடி இங்​கிலாந்து சென்​றிருந்​தார். அப்​போது இரு நாடு​களுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இது இப்​போது 56 பில்​லியன் டால​ராக உள்ள இருதரப்பு வர்த்​தகத்தை 2030-க்​குள் இரட்​டிப்​பாக்​கு​வதை நோக்​க​மாகக் கொண்​டது. இந்​தியா வரு​மாறு இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார். இந்த அழைப்பை ஏற்​றுக்​கொண்ட கீர் ஸ்டார்​மர், 2 நாள் அரசு முறை பயண​மாக வரும் 8-ம் தேதி இந்​தியா வரு​கிறார். கடந்த ஆண்டு பிரதம​ராக பதவி​யேற்ற பிறகு அவர் இந்​தியா வரு​வது இதுவே முதல் முறை.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா வரும் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர், 9-ம் தேதி பிரதமர் மோடியை மும்​பை​யில் சந்​தித்​துப் பேச உள்​ளார். இந்த சந்​திப்​பின்​போது, விஷன் 2035 என்ற 10 ஆண்டு திட்​டத்​தின் மூலம் இந்​தி​யா-இங்​கிலாந்து இடையே ஏற்​பட்ட கூட்​டாண்​மை​யின் முன்​னேற்​றம் குறித்து இரு தலை​வர்​களும் ஆய்வு செய்​வார்​கள்.

வர்த்​தகம், முதலீடு, தொழில்​நுட்​பம், புது​மை, ராணுவம், பாது​காப்​பு, காலநிலை, எரிசக்​தி, சுகா​தா​ரம், கல்​வி, இருதரப்பு மக்​கள் இடையி​லான உறவு ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது​தான் விஷன் 2035 திட்​டம்.

முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பிரச்​சினை​கள் குறித்​தும் கலந்​துரை​யாட உள்​ளனர். மேலும் வரும் 9-ம் தேதி மும்​பை​யில் நடை​பெற உள்ள 6-வது சர்​வ​தேச நிதி தொழில்​நுட்ப மாநாட்​டில் இரு தலை​வர்​களும் சிறப்​புரை​யாற்ற உள்​ளனர். இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x