Published : 06 Oct 2025 07:15 AM
Last Updated : 06 Oct 2025 07:15 AM

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு

டார்ஜிலிங்: கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார் ஜிலிங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இங்குள்ள கலிம் போங், கூச் பெஹார், ஜல்பைகுரி, அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள் ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனிடையே, டார்ஜிலிங் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல் வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு நிலச்சரிவு ஏற் பட்டது.

டார்ஜிலிங்கில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம், நிலச்சரி வால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 20 பேர் உயி ரிழந்துள்ளதாகத் தெரியவந் துள்ளது. சம்பவ இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை யினரும், மாநில பேரிடர் மீட் புப் படையினர் சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக் என்ற இடத்தில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந் தனர். இப்பகுதியிலும் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "மாநிலத்தின் வடக்கு, தெற்கு வங்கப் பகு திகள் மழை, வெள்ளம், நிலச் சரிவால் பாதிக்கப்பட்டிருப் பதை அறிந்து நான் கவலை அடைந்துள்ளேன். டார்ஜிலிங் கில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், தாங்கள் இருக் கும் இடத்திலேயே இருக்க வேண்டும். அவர்களை போலீ ஸார் வந்து மீட்கும் வரை அங் கேயே இருப்பது நல்லது. அவர் களுக்கு தேவையான உதவி களை அரசு வழங்கும். எனவே அவர்கள் பயப்படத் தேவை இல்லை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x