Published : 05 Oct 2025 07:55 AM
Last Updated : 05 Oct 2025 07:55 AM

தசரா பண்டிகைக்கு மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு 100 வகை உணவுகளுடன் விருந்து

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் தசரா பண்​டிகையை கொண்​டாட மாமி​யார் வீட்​டிற்கு வந்த மரு​மக​னுக்கு 100 வகை​யான உணவு​களு​டன் பிரம்​மாண்ட விருந்து அளிக்​கப்​பட்​டது. அதோடு மரு​மக​னுக்கு ஒரு சவரன் நகை பரி​சாக வழங்​கப்​பட்​டது.

தெலங்​கானா மாநிலம், வனபர்த்தி மாவட்​டத்தைச் சேர்ந்​தவர் சிந்​து. இவருக்​கும் வாரங்​கலை சேர்ந்த சுரேஷ் என்​பவருக்​கும் கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு திருப்​ப​தி​யில் திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மணத்​துக்கு பிறகு நவராத்​திரி பண்​டிகை வந்​த​தால் புதுமண தம்​ப​தி​யினர் கொத்​தகோட்​டா​விற்கு வரும்​படி பெண் வீட்​டார் அழைப்பு விடுத்​தனர். இதையேற்று சுரேஷும் சிந்​து​வும் கொத்​தகோட்​டாவுக்கு சென்​றனர்.

பெண் வீட்​டார் சார்​பில் புதுமண தம்​ப​திக்கு உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. மரு​மக​னுக்​காக 101 வகை​யான உணவு​களை சமைத்து தரு​வ​தாக மாமி​யார் உறுதி அளித்​திருந்​தார். அதில் ஒன்று குறைந்​தால்​கூட ஒரு சவரன் நகை போட வேண்​டும் என்று நகைச்​சுவைக்​காக மரு​மகன் நிபந்​தனை விதித்​தார்.

இந்த சூழலில் 60 இனிப்பு வகைகள், முறுக்​கு, சீடை என 30 அரிசி மாவு வகைகள், 10 வகை​யான பொறியல் என மரு​மக​னுக்கு பிரம்​மாண்ட விருந்து அளிக்​கப்​பட்​டது. அப்​போது இலை​யில் பரி​மாறப்​பட்ட உணவு வகைகளை எண்​ணி​ய​போது 100 வகை​யான தின்​பண்​டங்​களே இருந்​தன. இதைத் தொடர்ந்து பெண் வீட்​டார் சார்​பில் மாப்​பிள்​ளைக்கு ஒரு சவரன் நகை பரி​சாக வழங்​கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x