Published : 05 Oct 2025 06:51 AM
Last Updated : 05 Oct 2025 06:51 AM
புதுடெல்லி: சுதர்சன சக்கர திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ‘அட்வான்ஸ்டு வெப்பன் அண்ட் எகியூப்மென்ட் இண்டியா' (ஏடயுள்யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கான டெண்டரை ராணுவம் நேற்று வெளியிட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிரோன்கள், ராக்கெட், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்த ஆயுதம் பயன்படுத்தப்படும். பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்புக்கு இவை பயன்படுத்தப்படும்.
இந்த வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்பானது ஒரு டிரெய்லரில் பொருத்தப்பட்டு, கனரக வாகனத்தால் இழுத்துச் செல்லப்படும். இதன் மூலம் 4 கி.மீ. தொலைவு வரையிலும் நிமிடத்திற்கு 3,000 சுற்றுகள் வரையிலும் தாக்குதல் நடத்த முடியும். அனைத்து காலநிலையிலும் இதனை பயன்படுத்த முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT