Published : 04 Oct 2025 06:59 AM
Last Updated : 04 Oct 2025 06:59 AM

உ.பி.யில் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மசூதி, திருமண மண்டபம் இடிப்பு

மீரட்: உத்தர பிரதேச மாநிலம் சம்​பல் மாவட்​டம் ரயா பசர்க் கிராமத்​தில் கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் மசூதி மற்​றும் 30 ஆயிரம் சதுர மீட்​டரில் பிரம்​மாண்ட திருமண மண்​டபம் கட்​டப்​பட்​டது.

இந்​நிலை​யில், சமீபத்​தில் ரயா பசர்க் கிராமத்​தில் வரு​வாய்த் துறை​யினர் நில அளவை நடத்​தினர். அப்​போது குளம் இருந்த இடத்தை ஆக்​கிரமித்து மசூதி மற்​றும் திருமண மண்​டபம் கட்​டப்​பட்​டிருந்​தது தெரிய வந்​தது.

இதையடுத்து சம்​பந்​தப்​பட்ட மசூதி நிர்​வாகம் மற்​றும் திருமண மண்டப நிர்​வாகி​களுக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டது. இதுகுறித்து சம்​பல் மாவட்ட போலீஸ் எஸ்​.பி. பிஸ்​னோய் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, ‘‘ஆக்கிரமிப்பை அகற்ற 30 நாட்கள் அவகாசம் வழங்கி சம்​பந்​தப்​பட்ட நிர்​வாகி​களுக்கு கடந்த செப்​டம்​பர் 2-ம் தேதி நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டது.

எனினும், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. இதையடுத்​து, மசூதி மற்​றும் திருமண மண்​டபத்தை அதி​காரி​கள் இடித்து அப்​புறப்​படுத்​தினர்’’ என்றார். இந்​நிலை​யில், கிராம மக்​கள் கூறுகை​யில், ‘‘நன்​கொடைகள் வசூலித்​து​தான் திருமண மண்​டபத்தை கட்​டினோம். தற்​போது இடிக்​கப்​பட்​ட​தால், திருமண மண்​டபம் கட்​டு​வதற்கு வேறு நிலத்தை அரசு ஒதுக்கி தரவேண்​டும்’’ என்று கோரிக்கை விடுத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x