Published : 04 Oct 2025 06:45 AM
Last Updated : 04 Oct 2025 06:45 AM

பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய விமானப் படை தளபதி தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் 10 போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரி​வித்​துள்​ளார்.

பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்​மை​யில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய அவர், “கடந்த மே மாதம் இந்​தி​யா​வுடன் ஏற்​பட்ட போரின்​போது 7 இந்​திய போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம்’’ என்று தெரி​வித்​தார்.

இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில் இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங் டெல்​லி​யில் நேற்று கூறிய​தாவது: இந்​திய போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று அவர்​கள் (பாகிஸ்​தான்) கனவு கண்​டால், அந்த கனவை நான் கலைக்க விரும்​ப​வில்​லை. அவர்​கள் தொடர்ந்து கனவிலேயே இருக்​கட்​டும்.

இந்​தி​யா, பாகிஸ்​தான் போரின்​போது என்ன நடந்​தது என்​பது உலகத்​துக்கு தெரி​யும். சுமார் 90 மணி நேரம் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. இதில் பாகிஸ்​தான் பெரும் இழப்​பு​களை சந்​தித்​தது. போர் நீடித்​தால் பேரழிவை சந்​திக்க நேரிடும் என்​ப​தால் சண்டை நிறுத்​தத்தை அமல்​படுத்த அந்த நாடு மன்​றாடியது. பாகிஸ்​தான் ராணுவத்​தின் டிஜிஎம்ஓ இந்​திய ராணுவ அதி​காரியை நேரடி​யாக தொடர்பு கொண்டு பேசி​னார்.

பாகிஸ்​தான் மீது போர் தொடுக்க வேண்​டும் என்​பது இந்​தி​யா​வின் நோக்​கம் கிடை​யாது. அந்த நாட்​டில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​களை அழிக்க வேண்​டும் என்​பதே எங்​களது குறிக்​கோள். அந்த குறிக்​கோளை வெற்​றிகர​மாக நிறைவேற்​றி​விட்​டோம். எனவே பொறுப்​புள்ள நாடு என்ற வகை​யில் பாகிஸ்​தானின் வேண்​டு​கோளை ஏற்று போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது.

ரஷ்​யா, உக்​ரைன் இடையே மூன்​றரை ஆண்​டு​களுக்கு மேலாக போர் நீடித்து வரு​கிறது. இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் போர் நீடித்து வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் இந்​தி​யாவை முன்​மா​திரி​யாக கொண்டு உலக நாடு​கள் செயல்​படலாம். ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் விமானப் படைத் தளங்​கள், ராணுவத் தளங்​கள் தகர்க்​கப்​பட்​டன. அந்த நாட்​டின் 4 அதிநவீன ரேடார்​கள் மற்​றும் ஏவு​கணை தடுப்பு சாதனங்​கள் முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன. பாகிஸ்​தானின் முரித், சாக்​லா​வில் செயல்​பட்ட 2 கட்​டுப்​பாட்டு அறை​கள், ஏராள​மான ராணுவ நிலைகள் தரைமட்​ட​மாக்​கப்​பட்​டன.

வானில் பறந்து கொண்​டிருந்த பாகிஸ்​தானின் எப்​-16 (அமெரிக்க தயாரிப்​பு), ஜேஎப்​-17 (சீன தயாரிப்​பு) ரகங்​களை சேர்ந்த 4 முதல் 5 போர் விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இந்​திய எல்​லை​யில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலை​வில் பாகிஸ்​தான் வான்​பரப்​பில் பறந்த அதிநவீன உளவு விமானம் எஸ்​400 ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது.

பாகிஸ்​தானின் முக்​கிய விமானப் படைத் தளங்​கள் மீது ஏவு​கணை​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டன. இதில் விமானப் படைத் தளங்​களில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த எப்16 ரகத்தை சேர்ந்த 4 முதல் 5 போர் வி​மானங்​கள் தகர்க்​கப்​பட்​டன. வானில் 5, தரை​யில் 5 என பாகிஸ்​தானின்​ 10 போர்​ வி​மானங்​கள்​ அழிக்​கப்​பட்​டு உள்​ளன. இவ்​வாறு ராணுவ தளப​தி ஏ.பி.சிங்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x