Published : 04 Oct 2025 06:33 AM
Last Updated : 04 Oct 2025 06:33 AM

அடுத்த முறை பாகிஸ்தானுக்கு கருணை காட்ட மாட்டோம்: இந்திய ராணுவ தளபதி பகிரங்க எச்சரிக்கை

ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்​தானுக்கு கருணை காட்ட மாட்​டோம் என்று இந்​திய ராணுவ தளபதி உபேந்​திர திவேதி பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ராஜஸ்​தானின் ஸ்ரீகங்​காநகரில் இந்​திய ராணுவ முகாம் அமைந்​துள்​ளது. பாகிஸ்​தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ தளபதி உபேந்​திர திவேதி நேற்று ஆய்வு செய்​தார். அப்​போது ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது சிறப்​பாக செயல்​பட்ட வீரர்​களுக்கு அவர் பரிசுகளை வழங்​கி​னார். பிஎஸ்​எப், ராஜஸ்​தான் ரைபிள்ஸ் படைகளை சேர்ந்த அதி​காரி​கள், வீரர்​கள் கவுரவிக்​கப்​பட்​டனர். பின்​னர் வீரர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது: பாகிஸ்​தானில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​கள் குறித்த ஆதா​ரங்​கள் ஆபரேஷன் சிந்​தூரின்​போது உலகத்​துக்கு தெரிய​வந்​தது. இதன்​மூலம் பாகிஸ்​தானின் உண்மை முகம் அம்​பல​மானது.

பாகிஸ்​தான் மக்​களுக்கு எந்த தீங்​கும் நேரக்​கூ​டாது என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறோம். ஆனால் அந்த நாட்​டின் தீவிர​வா​தி​களை அழிப்​ப​தில் ஈவு, இரக்​கம் காட்ட முடி​யாது. ஆபரேஷன் சிந்​தூரின்​போது தீவிர​வாத முகாம்​களை மட்​டுமே அழித்​தோம். ஆனால் இந்​தியா மீது பாகிஸ்​தான் போர் தொடுத்​தது. இந்த போரில் பாகிஸ்​தான் பெரும் தோல்​வியை சந்​தித்​தது. பொறுமை, கருணை அடிப்​படை​யில் போர் நிறுத்​தத்தை அமல் செய்​தோம்.

ஆனால் அடுத்த முறை பாகிஸ்​தானுக்கு கருணை காட்ட முடி​யாது. அந்த நாடு தீவிர​வா​தி​களுக்கு ஆதரவு அளிப்​பதை உடனடி​யாக நிறுத்தி கொள்ள வேண்​டும். இல்​லை​யெனில் ஆபரேஷன் சிந்​தூர் 2.0 ராணுவ நடவடிக்கை எடுக்​கப்​படும். உலக வரைபடத்​தில் அந்த நாடே இல்​லாமல் போய்​விடும்.

ஆபரேஷன் சிந்​தூரின்​போது எல்​லைப் பகுதி மக்​கள் ராணுவத்​தோடு இணைந்து பணி​யாற்​றினர். இந்த நேரத்​தில் ராணுவத்​தின் சார்​பில் அவர்​களுக்கு மரி​யாதை செலுத்​துகிறேன். எந்த சூழ்​நிலை​யை​யும் எதிர்​கொள்ள இந்​திய ராணுவ வீரர்​கள் தயார் நிலை​யில் இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு ராணுவ தளப​தி உபேந்​திர திவே​தி தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x