Published : 29 Sep 2025 07:24 AM
Last Updated : 29 Sep 2025 07:24 AM

வங்கி வாடிக்கையாளர்களின் ரூ.16 கோடியை சுருட்டிய அதிகாரி

புதுடெல்லி: பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது.

2023 மே முதல் 2025 ஜூலை வரையி​லான கால​கட்​டத்​தில் எப்​டி, பிபிஎப், மூத்த குடிமக்​கள் சேமிப்பு திட்​டம் மற்​றும் செயலற்ற கணக்​கு​களில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்​கிற்கு மாற்​றிக் கொண்​டுள்​ளார்.

குறிப்​பாக, மூத்த குடிமக்​கள், மைனர், இறந்தவர்கள் மற்​றும் அரி​தாகவே இருப்பை சரி​பார்க்​கும் வாடிக்​கை​யாளர்​களை குறி​வைத்து அவர் இந்த மோசடி​யில் ஈடுபட்டுள்ளார்.

செயலற்ற மூடப்​பட்ட கணக்​கு​களி​லிருந்து பெரு​மளவி​லான பணம் சிங்​லா​வின் தனிப்​பட்ட எஸ்​பிஐ வங்கி கணக்​கிற்கு திருப்பி விடப்​பட்​டுள்​ளது. அதை அவர் பங்கு வர்த்​தகம், கிரிப்​டோகரன்​ஸி, ஆன்​லைன் சூதாட்ட தளங்​களில் முதலீடு செய்​துள்​ளார். முதலில் அதிக அளவில் லாபம் கிடைத்த போ​தி​லும் அடுத்​தடுத்து இழப்​பு​களை சந்​தித்​துள்​ளார்.

இழந்​ததை பிடிக்க தனது பந்​த​யங்​களை இரட்​டிப்​பாக்கி சிங்லா கடும் நஷ்டத்​துக்கு ஆளாகி உள்​ளார். மோசடி தெரிந்ததும் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட ஹிதேஷ் சிங்லா கடந்த வாரம் குஜ​ராத் மாநிலத்​தில் ஓடும் ரயி​லில் வைத்து கைது செய்​யப்​பட்​டார்.

இப்​போது அவர் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சிபிஐ மற்​றும் அமலாக்​கத்​துறை இரண்​டும் அமைப்​பு​களும் இந்த மோசடி சம்​பவம் தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x