Published : 28 Sep 2025 09:39 AM
Last Updated : 28 Sep 2025 09:39 AM
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் மாவோயிஸ்ட் தம்பதிகளான ஜக்கு குர்சம் என்கிற ரவி என்கிற ரமேஷ் (28), கமலா குர்சம் (27) ஆகியோரை பாதுகாப்புப் படையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இவர்கள் இருவரைப் பற்றியும் தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்திய போது 10 கிராம் தங்க பிஸ்கட், ரூ.1.4 லட்சம் ரொக்கம், 2 ஆன்ட்ராய்டு போன்கள் மற்றும் மாவோயிஸ்ட் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் மாவோயிஸ்ட்களுக்கு மருந்துகள், அத்தியாவசிய உணவு பொருட்களை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT