Published : 26 Sep 2025 08:22 AM
Last Updated : 26 Sep 2025 08:22 AM

இலங்கையில் கேபிள் கார் விபத்தில் இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்​கை​யின் வடமேற்​கில், தலைநகர் கொழும்​பு​வில் இருந்து 125 கி.மீ. தொலை​வில் நிகவெரட்​டியா என்ற இடம் உள்ளது. இங்​குள்ள வனம் மற்​றும் மலைப் பகு​தி​யில் புகழ்​பெற்ற நா உயானா புத்த மடால​யம் உள்​ளது. இந்த மடால​யத்​திற்கு செல்ல பழமை​யான கேபிள் கார் சேவை​யும் உள்​ளது. தியானப் பயிற்​சிகளுக்கு பெயர்​பெற்ற இந்த மடால​யத்​திற்கு உலகில் பல்​வேறு நாடு​களில் இருந்​தும் பலர் வந்து செல்​கின்​றனர்.

இந்​நிலை​யில் புதன்​கிழமை இரவு இங்​குள்ள கேபிள் காரில் புத்த துறவி​கள் பயணித்​த​போது, கேபிள் திடீரென அறுந்​தது. இதில் கேபிள் கார் பெட்டி அதிவேகத்​தில் கீழ்​நோக்கி சென்று ஒரு மரத்​தின் மீது மோதி​ய​தாக கூறப்​படு​கிது. இந்த விபத்​தில் 7 துறவி​கள் உயி​ரிழந்​தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்​தனர். உயி​ரிழந்த 7 துறவி​களில் ஓர் இந்​தி​யர், ஒரு ரஷ்யர், ருமேனியர் ஒருவரும் அடங்​கு​வர் என போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

காயம் அடைந்த 6 பேரில் 4 பேர் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் உள்​ளனர். இதனால் உயி​ரிழப்பு அதி​கரிக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது. இந்த, நா உயானா மடால​யம் இலங்​கை​யின் பழமை​யான புத்த வன மடால​யங்​களில் ஒன்​றாகும். இது, கிமு 3-ம் நூற்​றாண்டை சேர்ந்​தது என அதன் இணை​யதளத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

“மடாலய வளாகத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட துறவி​கள் வசிக்​கின்​றனர். அதே நேரத்​தில் பார்​வை​யாளர்​கள் தியானங்​கள் மற்​றும் பிற ஆன்​மீக நிகழ்​வு​களில் பங்​கேற்க முடி​யும்” என்​றும் இணைய தளத்​தில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x