Published : 26 Sep 2025 08:03 AM
Last Updated : 26 Sep 2025 08:03 AM

முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் பதவிக் காலம் 8 மாதங்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: ​முப்​படைகளின் தலைமை தளபதி அனில் சவு​கானின் பதவிக்​காலம் 8 மாதங்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பாது​காப்பு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கடந்த 2022-ம் ஆண்டு செப்​டம்​பர் முதல் முப்​படைகளின் தலைமை தளப​தி​யாக​வும் (சிடிஎஸ்), ராணுவ விவ​கார துறை​யின் செயல​ராக​வும் அனில் சவு​கான் (64) பணி​யாற்றி வரு​கிறார். இவரது பதவிக்​காலம் செப்​டம்​பர் 30-ம் தேதி நிறைவடைய உள்​ளது.

இந்த நிலை​யில், அனில் சவு​கானின் பதவிக் காலத்தை மே 30, 2026 வரை அல்​லது மறு உத்​தரவு வரும் வரை நீட்​டிக்க அமைச்​சரவை நியமனக் குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இவ்​வாறு பாது​காப்பு அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது முப்​படைகளின் ஒருங்​கிணைப்பை உறுதி செய்​வ​தில் அனில் சவு​கான் முக்​கிய பங்கு வகித்​துள்​ளார்.

சிடிஎஸ் ஆக நியமிக்​கப்​பட்​ட​திலிருந்​து, ராணுவம், கடற்​படை மற்​றும் விமானப்​படை இடையே கூட்​டுறவை மேம்​படுத்​து​வ​தில் அவர் அதிக கவனம் செலுத்தி வரு​கிறார். ஹெலி​காப்​டர் விபத்​தில் தலைமை தளபதி பிபின் ராவத் இறந்​ததைத் தொடர்ந்து ஒன்​பது மாதங்​களாக அந்​தப் பதவி காலி​யாக இருந்​தது. அதன்​பிறகு, சிடிஎஸ் பொறுப்பை அனில் சவு​கான் ஏற்​றுக்​கொண்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x