Published : 26 Sep 2025 07:42 AM
Last Updated : 26 Sep 2025 07:42 AM

ஒரு குடையின் கீழ் திருப்பதி தேவஸ்தான கோயில்கள்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

திருமலை: ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா​வின் 2-ம் நாளான நேற்று காலை திரு​மலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஏஐ தொழில்​நுட்​பக் கட்​டுப்​பாட்டு அறையை திறந்து வைத்​தார். அப்​போது அவர் அங்​கிருந்த தொழில்​நுட்ப வல்​லுநர்​களிடம் அதன் பயனை​யும், செயல்​பாட்டு முறை​களை​யும் கேட்​டறிந்​தார்.

வரிசை​யில் காத்​திருக்​கும் பக்​தர்​களுக்கு ஏழு​மலை​யானின் மகிமை​கள், திரு​மலை​யின் புனித தன்​மை, பெரு​மை​களை விளக்​கும் வகை​யில் வீடியோ பதிவு​களை போட்டு காண்​பிக்க வேண்​டும். அப்​போது​தான் திரு​மலை​யின் புனிதம், ஏழு​மலை​யானின் பெரு​மை​கள், வரலாற்றை இன்​றைய தலை​முறை​யினர் அறி​வார்​கள். மேலும், திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சம்​பந்​தப்​பட்ட அனைத்து கோயில்​களை​யும் ஒரு குடை​யின் கீழ் இந்த கமாண்ட் கன்ட்​ரோல் அறைக்​குள் கொண்டு வரவேண்​டும். இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு அறி​வுறுத்​தி​னார்.

வைகுண்​டம் க்யூ காம்ப்​ளக்​ஸ்​-1ல் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்ள இந்த ஏஐ தொழில்​நுட்​பக் கட்​டுப்​பாட்டு அறை மூலம் பக்​தர்​களின் கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​த​வும், வசதி​களை மேம்​படுத்​த​வும், பாது​காப்பை அதி​கரிக்​க​வும் செய்​ய​லாம்.

6,000 கண்​காணிப்பு கேம​ராக்​கள் உதவி​யுடன் அடை​யாளம் கண்டு அலிபிரி முதல் திரு​மலை வரை எத்​தனை பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து கொண்​டுள்​ளனர். திரு​மலை​யில் எத்​தனை பேர் தங்கி உள்​ளனர் போன்ற விவரங்​களை உடனுக்​குடன் அறிய முடி​யும். இது நாட்​டிலேயே முதன் முறை​யாக தற்​போது ஏழு​மலை​யான் கோயி​லில் அறி​முகம் செய்​து வைக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x