Last Updated : 26 Sep, 2025 06:56 AM

 

Published : 26 Sep 2025 06:56 AM
Last Updated : 26 Sep 2025 06:56 AM

மறைந்த கன்னட எழுத்தாளர் பைரப்பா உடலுக்கு முதல்​வர் சித்தராமையா அஞ்சலி

பெங்களூரு: பத்ம பூஷன் விருதுபெற்ற கன்னட எழுத்​தாள‌ர் எஸ்​.எல்​.பைரப்பா (94) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரு​வில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் நேற்​று​முன்​தினம் கால​மா​னார் (94).

கர்​நாடக மாநிலம் ஹாசன் மாவட்​டத்​தில் உள்ள சென்​னப்​பட்​ணா​வில் 1931-ல் பைரப்பா பிறந்​தார். 20-க்​கும் மேற்​பட்ட நாவல்​களை எழு​தி​யுள்​ளார். அவை கன்​னடத்​தில் இருந்து தமிழ், தெலுங்​கு, இந்தி உட்பட 10-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் மொழிபெயர்க்​கப்​பட்​டன.

எஸ்​.எல்​.பைரப்​பா​வின் எழுத்​துப் பணி​களுக்​காக சாகித்ய அகாட​மி, பத்​மஸ்ரீ, பத்​மபூஷண் மற்​றும் சரஸ்​வதி சம்​மான் விருதுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. பைரப்​பா​வின் மறைவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

பெங்​களூரு​வில் உள்ள ரவீந்​திர கலாஷேத்​ரா​வில் வைக்​கப்​பட்​டிருந்த எஸ்​.எல்​.பைரப்​பா​வின் உடலுக்கு கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார், எதிர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா உள்​ளிட்​டோர் நேற்று மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தினர். பைரப்​பா​வின் இறுதி சடங்​கு​கள் இன்று மைசூரு​வில் நடைபெறுகின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x