Published : 25 Sep 2025 06:12 AM
Last Updated : 25 Sep 2025 06:12 AM

சத்தீஸ்கரில் 71 நக்சலைட்கள் போலீஸில் சரணடைந்தனர்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 71 நக்​சலைட்​கள் நேற்று சரணடைந்​தனர். சத்​தீஸ்​கர் மாநிலம் நக்சல்​கள் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஒன்​றாக உள்​ளது. இந்​நிலை​யில், நக்​சல்​களின் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு மாநில அரசுகளு​டன் இணைந்து பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

குறிப்​பாக, சரணடை​யும் நக்​சல்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு வழி​காட்டி வரு​கிறது. அதே​நேரம், 2026 மார்ச் மாதத்​துக்​குள் நக்​சல்​கள் ஆதிக்​கத்தை ஒடுக்க மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சத்​தீஸ்​கர் மாநிலம் தண்​டே​வாடா மாவட்​டத்​தில் 21 பெண்​கள் உட்பட 71 நக்​சலைட்​கள் காவல் துறை மற்​றும் சிஆர்​பிஎப் உயர் அதி​காரி​கள் முன்பு நேற்று சரணடைந்​த​தாக தண்​டே​வாடா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.

இதில் 30 பேர் பற்​றிய தகவல் கொடுப்​பவர்​களுக்கு மொத்​தம் ரூ.64 லட்​சம் பரிசு வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. மேலும் சுமார் 17 வயதுடைய ஒரு சிறு​வன் மற்​றும் 2 சிறுமிகளும் சரணடைந்​தவர்​களில் அடங்​கு​வர்.

இது​வரை 1,113 நக்​சல்​கள் சரணடைந்​துள்​ளனர். சரணடை​யும் நக்​சல்​களுக்கு முதல்​கட்​ட​மாக தலா ரூ.50 ஆயிரம் நிதி​யுதவி வழங்​கப்​படு​கிறது. இது த​விர, அரசின் கொள்​கைப்​படி அவர்​களின் மறு​வாழ்​வுக்​கான உதவி​கள் வழங்​கப்​படும். நேற்று முன்​தினம் சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்​தில் நிகழ்ந்த என்​க​வுட்​டரில் 2 முக்​கிய நக்​சல்​கள் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், 71 பேர் சரணடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x