Published : 25 Sep 2025 08:54 AM
Last Updated : 25 Sep 2025 08:54 AM

காஷ்மீர், பஞ்சாபில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்​துக்கு 4 மாநிலங்​களவை உறுப்​பினர் பதவி​கள் ஒதுக்​கப்​பட்​டிருந்​தன. ஆனால், தேர்தல் நடை​பெறாமல் இருந்​த​தால், குலாம் நபி ஆசாத் உள்பட 4 மாநிலங்​களவை உறுப்​பினர்​களின் பதவி​கள் 2021-ம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, புதிய உறுப்​பினர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​ப​டா​மல் காலி​யாக இருந்​தன.

இந்​நிலை​யில், தற்​போது ஜம்மு - காஷ்மீருக்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நிறைவடைந்​து, மாநிலங்​களவை உறுப்​பினர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்கு தேவை​யான உறுப்​பினர்​கள் உள்​ள​தால் தேர்​தல் தேதி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஜம்​மு-​காஷ்மீரில் காலி​யாக உள்ள 4 இடங்​களுக்கு 3 தேர்​தல் தனித்​தனி​யாக நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், மாநிலங்​களவை உறுப்​பின​ராக இருந்த சஞ்​சீவ் அரோ​ரா, பஞ்​சாப் சட்​டப்​பேரவை இடைத்​தேர்​தலில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றதைத் தொடர்ந்​து, கடந்த ஜூலை மாதம் தனது எம்​.பி. பதவியை ராஜி​நாமா செய்​தார்.இந்​நிலை​யில், பஞ்​சாபில் காலி​யாக இருக்​கும் ஒரு மாநிலங்​களவை இடத்​துக்கு இடைத் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அக். 24-ல் வாக்குப்பதிவு: ஜம்மு - காஷ்மீர் மற்​றும் பஞ்​சாப் மாநிலங்​களில் காலி​யாக​வுள்ள மொத்​தம் 5 மாநிலங்​களவை எம்​.பி. பதவி​களுக்​கும் வரும் அக்​டோபர் 6-ம் தேதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கும். போட்டி நில​வும் பட்​சத்​தில் அக்​டோபர் 24-ம் தேதி வாக்​குப்​ப​திவு நடை​பெறும். அன்று மாலையே வாக்கு எண்​ணிக்கை நடத்​தப்​பட்டு முடிவு​கள் அறிவிக்​கப்​படும் என்று தலை​மைத்​ தேர்தல்​ ஆணை​யம்​ தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x