Published : 25 Sep 2025 08:40 AM
Last Updated : 25 Sep 2025 08:40 AM

திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆந்திர அரசு தரப்பில், நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். அப்போது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ் பேரன் தேவான்ஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்​றத்​துடன் வெகு சிறப்​பாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. கொடியேற்​றத்தை முன்​னிட்​டு, ஏழு​மலை​யான் கோயி​லில், நேற்று மாலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பரை ஊர்​வல​மாக தங்க கொடிமரத்​தின் அருகே கொண்டு வந்​தனர். அங்கு வேத​பண்​டிதர்​கள் வேதங்​கள் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க, கருடன் சின்​னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்​தில் ஏற்றப்பட்டது.

இது முப்​பது முக்​கோடி தேவாதி தேவர்​களை​யும் பிரம்​மோற்​சவத்​துக்கு அழைப்பு விடுப்​ப​தற்​கான ஒரு நிய​தி​யாகும் என கூறப்​படு​கிறது. இதனை தொடர்ந்​து, வரும் அக்​டோபர் மாதம் 2-ம் தேதி வரை தின​மும் காலை​யில் 8 மணி முதல் 10 மணி வரை​யிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரை​யிலும் உற்​சவ​ரான மலை​யப்​பர் வித​வித​மான வாக​னங்​களில் 4 மாட வீதி​களில் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிக்க உள்​ளார்.

இதில் ஒரு நாள் தங்க தேரோட்​டத்​தி​லும், ஒரு நாள் மர தேரிலும் பவனி வந்து காட்சி அளிக்க உள்​ளார். பிரம்​மோற்​சவம் நடை​பெறும் அனைத்து நாட்​களி​லும் தின​மும் மதி​யம் உற்சவ மூர்த்​தி​களுக்கு திரு​மஞ்சன நிகழ்ச்சி நடை​பெறு​வது ஐதீகம். இதில் இரண்டு முறை சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடத்​தி, வித​வித​மான அலங்​காரங்​களும் செய்​யப்​படும்.

பிரம்​மோற்சவ விழா​வினை முன்​னிட்டு திருப்​பதி மற்​றும் திரு​மலை விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. விழா தொடங்​கியதையடுத்​து, ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்​வரியுடன் வந்து ஆந்​திர அரசு தரப்​பில் பட்டு வஸ்​திரங்​களை காணிக்​கை​யாக வழங்​கி​னார். முன்​ன​தாக நேற்று மாலை அவர் விமானம் மூலம் ரேணி​குண்டா விமான நிலை​யம் வந்​தடைந்​தார். அவரை அமைச்​சர்​கள், எம்​பி, எம்​.எல்​.ஏக்​கள், அரசு, தேவஸ்​தான அதி​காரி​கள் உற்​சக​மாக வரவேற்​றனர்.

அதன் பின்​னர், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது குடும்​பத்​தா​ருடன் காரில் திரு​மலைக்கு சென்​றார். அங்கு தேவஸ்​தான அதி​காரி​கள் அவரை வரவேற்​றனர். அதன் பின்​னர், பேடி ஆஞ்​சநேயர் கோயி​லில் இருந்து பட்டு வஸ்​திரத்தை தலை​யில் சுமந்து சென்று கோயி​லில் தேவஸ்​தான அர்ச்​சகர்​களிடம் அவற்றை சமர்ப்​பித்​தார்.

பிரம்​மோற்சவ விழா​வில் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​ராய் மலை​யப்​பர் ஆதி சேஷ​னாக கருதப்​படும் பெரிய சேஷ வாக​னத்​தில் எழுந்​தருளி​னார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடை​பெற்ற இந்த வாகன சேவை​யில் குடியரசு துணை தலை​வர் சிபி ராதாகிருஷ்ணன் மற்​றும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்​டனர்.

வாகன சேவையை காண மாட வீதி​களில் திரளான பக்​தர்​கள் காத்​திருந்​து, கோவிந்​தா...கோ​விந்தா என கோஷமிட்டு சுவாமியை வழிப்​பட்​டனர். வாகன சேவை​யில் காளை, குதிரை, யானை ஆகிய பரிவட்​டங்​கள் முன்​னால் செல்ல, ஜீயர் குழு​வினர் நாலா​யிரம் திவ்ய பிரபந்​தத்தை பாடியபடி செல்ல, இவர்​களுக்​கு பின்​ 28 மாநிலங்​களில்​ இருந்​து வந்​திருந்​த நடன கலைஞர்​களின்​ கலை நிகழ்ச்​சிகள்​ அனைவரை​யும்​ கவர்​ந்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x