Published : 24 Sep 2025 08:00 AM
Last Updated : 24 Sep 2025 08:00 AM

கொல்கத்தாவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் தாக்கி மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்​கத்​தா​வில் திங்​கள்​கிழமை இரவு முழு​வதும் கனமழை கொட்​டி தீர்த்தது. இதில் மின்​சா​ரம் தாக்கி மூவர் உட்பட மொத்​தம் 8 பேர் உயிரிழந்தனர். கொல்​கத்​தா​வில் நேற்​று​முன்​தினம் இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. இதன் காரண​மாக, நகரின் பல இடங்​களில் தண்​ணீர் தேங்​கியது. தாழ்​வான பகு​தி​களில் உள்ள வீடு​களுக்​குள் வெள்​ளம் புகுந்​த​தால் மக்​களின் அன்​றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டது.

பெனி​யாபு​குர், காலிகபூர், நேதாஜி நகர், காரியஹட், ஏக்​பல்​பூர், பெஹலா மற்​றும் ஹரிதேவ்​பூர் நகரில் நிகழ்ந்த பல்​வேறு சம்​பவங்​களில் மொத்​தம் 8 பேர் உயி​ரிழந்​தனர். இதில் மின்​சார கசி​வின் காரண​மாக உயி​ரிழந்த 3 பேரும் அடக்​கம். சாலைகள், ரயில் பாதைகளில் தண்​ணீர் தேங்​கிய​தால் பேருந்து போக்​கு​வரத்​து, புறநகர் ரயில் சேவை, மெட்​ரோ சேவை​கள் முடங்​கின. தண்​ணீர் வீடு​களுக்​குள் புகுந்​த​தால் மக்​களின் உடமை​களுக்கு பெருத்த சேதம் ஏற்​பட்​டது. கனமழை தொடரும் என்ற அறி​விப்​பின் காரண​மாக பள்​ளி​களுக்கு நேற்று விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது.

கொல்​கத்தா முனிசிபல் கார்ப்​பரேஷன் புள்​ளி​விவரப்​படி, கொல்​கத்தா நகரின் தெற்கு மற்​றும் கிழக்கு பகு​தி​கள் கனமழை​யால் அதி​கம் பாதிப்​படைந்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது. குறிப்​பாக, கரியா காம்​தாஹரி​யில் சில மணி நேரங்​களில் மட்​டும் 332 மில்லி மீட்​டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்​தது. இதைத் தொடர்ந்து ஜோத்​பூர் பார்க்​கில் 285 மி.மீ, காலிகட் 280 மி.மீ, டாப்​சியா 275 மி.மீ, பாலிகஞ்ச் 264 மி.மீ. உள்​ளிட்ட நகரங்​களி​லும் அதிக அளவில் மழைப்​பொழிவு இருந்​தது.

வங்​காள விரி​குடா பகு​தி​யில் ஏற்​பட்ட குறைந்த காற்​றழுத்த தாழ்வு நிலை காரண​மாகவே கொல்​கத்​தா​வில் விடிய விடிய மழை கொட்​டித் தீர்த்​த​தாக வானிலை மைய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். துர்கா பூஜை கொண்​டாட்​டங்​கள் களை​கட்​டி​யுள்ள நிலை​யில் கொல்​கத்தா நகரில் பெய்து வரும் இந்த கனமழை பக்​தர்​களுக்கு கடும் இடையூறை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சாலைகள் முழு​வதும் தண்​ணீர் தேங்​கி​யுள்​ள​தால் ஏர் இந்​தியா மற்​றும் இண்​டிகோ விமான நிறு​வனங்​களின் புறப்​பாடு தாமத​மாகலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, விமான நிலை​யத்​துக்கு புறப்​படு​வதற்கு முன்​பாக பயணி​கள் தங்​களது புறப்​பாடு நேரத்தை மீண்​டும் ஒரு முறை உறு​திப்​படுத்​திக் கொள்​ளு​மாறு விமான நிறு​வனங்​கள் கேட்​டுக்​கொண்​டுள்​ளன.

கொல்​கத்தா மேயரும், திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான பிர்​ஹாத் ஹக்​கீம் கூறுகை​யில்" கொல்​கத்தா நகரில் இவ்​வளவு தண்​ணீர் தேங்​கியதை நான் இது​வரை பார்த்​த​தில்​லை. பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு மாநக​ராட்​சி, உணவு மற்​றும் தங்​குமிடத்தை ஏற்​பாடு செய்து வரு​கிறது. மழை தொடர​வில்லை என்​றால் கொல்​கத்தா நகரின் நிலைமை விரை​வில் இயல்பு நிலைக்கு திரும்​பும்" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x