Published : 24 Sep 2025 07:51 AM
Last Updated : 24 Sep 2025 07:51 AM

பிரதமர் மோடியின் ‘சுதேசி' கோரிக்கைக்கு ஆதரவு: ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சுதேசி பொருட்​களை பயன்​படுத்த வேண்​டும் என பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​திய நிலை​யில், மத்​திய அமைச்சர் அஸ்​வினி வைஷ்ணவ் 'ஜோஹோ' மென்​பொருள் சேவை தளத்​துக்கு மாறி உள்​ளார். இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்​துள்​ள​தால் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சமீப கால​மாக உள்​நாட்​டில் தயா​ராகும் பொருட்​கள் மற்​றும் சேவை​களை (சுதேசி) பயன்​படுத்த வேண்​டும் என பிரதமர் மோடி வலி​யுறுத்தி வரு​கிறார்.

இந்த சூழலில் மத்​திய தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூகவலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நான் ஆவணங்​கள், அட்​ட​வணை​கள் மற்​றும் விளக்​கப்​படங்​களுக்​காக நமது உள்​நாட்டு மென்​பொருள் சேவை தளமான ஜோஹோவை பயன்​படுத்​தத் தொடங்கி விட்​டேன். பிரதமர் மோடி​யின் கோரிக்​கையை ஏற்று அனை​வரும் சுதேசி பொருட்​கள் மற்​றும் சேவை​களைப் பயன்​படுத்த வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.

இதற்கு பதில் அளிக்​கும் வகை​யில் ஜோஹோ நிறுவன தலை​மைச் செயல் அதி​காரி ஸ்ரீதர் வேம்பு வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், “நன்றி சார், எங்​கள் தயாரிப்பு தொகுப்பை உரு​வாக்க 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக கடின​மாக உழைத்த எங்​கள் பொறி​யாளர்​களுக்கு இது மிகப்​பெரிய மன உறு​தியை அளிக்​கிறது. நாங்​கள் உங்​களை பெரு​மைப்​படுத்​து​வோம், நமது நாட்​டை​யும் பெரு​மைப்​படுத்​து​வோம். ஜெய் ஹிந்த்" என கூறி​யுள்​ளார். ஜோஹோ, ஸ்ரீதர் வேம்பு தலை​மை​யில் கடந்த 1996-ல் இந்​தி​யா​வில் தொடங்​கப்​பட்ட பன்​னாட்டு நிறு​வனம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x