Published : 24 Sep 2025 07:09 AM
Last Updated : 24 Sep 2025 07:09 AM

உயர் படிப்புக்காக ரஷ்யா சென்ற இந்திய இளைஞரை உக்ரைன் போருக்கு அனுப்பிய ராணுவம்

ராகேஷ் குமார்

ருத்ரபூர்: ரஷ்​யா​வில் படிக்​கச் சென்ற உத்​த​ராகண்ட் மாநில இளைஞர் ஒரு​வரை, ரஷ்ய ராணுவத்​தில் சேர்த்து போர் முனைக்கு அனுப்​பிய சம்​பவம் நடந்​துள்​ளது. உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபூர் பகு​தி​யிலுள்ள குஷ்மோத் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ராகேஷ் குமார் (30). இவர் அண்​மை​யில் ரஷ்​யா​விலுள்ள செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் பல்​கலைக்​கழகத்​தில் இணைந்து உயர்​கல்வி பயில்​வதற்​காகச் சென்​றார்.

ஆனால் அவரை ரஷ்ய ராணுவத்​தினர் சிறைபிடித்து பயிற்சி அளித்து உக்​ரைனுக்கு எதி​ராக போரிட போர்​முனைக்கு அனுப்​பி​யுள்​ளனர். இதுதொடர்​பாக தனது குடும்​பத்​தா​ருக்கு தகவல் தெரி​வித்​துள்ள ராகேஷ் குமார், தன்னை மீட்க உதவு​மாறு கோரி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக ராகேஷ் குமாரின் குடும்​பத்​தார், மத்​திய வெளி​யுறவுத்​துறை அமைச்​சகத்​துக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது:
ரஷ்​யா​விலுள்ள செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்து படிப்​ப​தற்​காக ராகேஷ் குமார் சென்​றார். ஆனால் அவரை வலுக்​கட்​டாய​மாக ராணுவத்​தில் சேர்த்து போர்​முனைக்கு அனுப்​பி​யுள்​ளனர்.

அவரை மீட்க உதவ வேண்​டும். மாஸ்​கோ​விலுள்ள இந்​திய தூதரகத்​தின் மூலம் அவரை மீட்​ப​தற்​கான முயற்​சிகளில் ஈடு​பட​வேண்​டும். அவர் தற்​போது எங்​கிருக்​கிறார் என்றே தெரிய​வில்​லை.
கல்வி பயில்​வதற்​கான விசா​வில் அவர் ரஷ்யா சென்​றார். அவரை வலுக்​கட்​டாய​மாக சேர்த்து ராணுவப் பயிற்சி அளித்து போர் முனைக்​கு அனுப்​பி​யுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x