Published : 24 Sep 2025 07:04 AM
Last Updated : 24 Sep 2025 07:04 AM

பாதுகாப்பு படையினருக்கு ம.பி.யில் ட்ரோன் பயிற்சி

புதுடெல்லி: ​பாது​காப்பு படை​யினருக்கு மத்​தி​யப் பிரதேசத்​தில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி நடை​பெறுகிறது. ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் படை​யினர் துருக்கி அளித்த ட்ரோன்​களை அதி​கள​வில் பயன்​படுத்​தின.

இவற்​றில் சில​வற்​றில் ஆயுதங்​களும், மற்​றவை​களில் கேமிரா மட்​டுமே இருந்​தன. இந்​திய எல்​லைப் பகு​தி​களின் நில​வரத்தை அறிந்து கொள்​வதற்​காக இந்த ட்ரோன்​கள் அனுப்​பப்​பட்​டன. ஆனால், இவற்றை நமது வான் பாது​காப்பு கருவி​கள் நடு​வானில் சுட்டு வீழ்த்​தின.

எதிர்​காலத்​தில் போரில் வீரர்​களை ஈடு​படுத்​து​வதற்கு பதில் ட்ரோன்​கள்​தான் அதி​கள​வில் ஈடு​படுத்​தப்​படும் சூழல் நில​வு​கிறது. இந்​நிலை​யில் பாது​காப்பு படை​யினருக்கு மத்​தி​யப் பிரதேசத்​தில், ‘க்​கோல்ட் ஸ்டார்ட்’ என்ற பெயரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

இதில் ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்​து​வது, எதிரி நாட்டு ட்ரோன்​களை நடு​வானில் சுட்டு வீழ்த்​து​வது போன்ற பயிற்​சிகள் அளிக்​கப்​படும். இந்த பயிற்சி பாது​காப்பு படை​யின் அனைத்து பிரிவு​கள், தொழில்​துறை​யினர், ஆராய்ச்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளவர்​கள் மற்​றும் கல்​வித்​துறை​யினரின்​ ஒத்​துழைப்​போடு மேற்​கொள்​ளப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x