Last Updated : 21 Sep, 2025 09:41 AM

1  

Published : 21 Sep 2025 09:41 AM
Last Updated : 21 Sep 2025 09:41 AM

ஈரானில் இந்தியர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: ஈரானில் வேலைக்​காக செல்​லும் இந்​தி​யர்​களை அந்​நாட்​டில் உள்ள ஆள் கடத்​தும் கும்​பல் பிடித்து வைக்​கிறது. பின்​னர் அவர்​களை விடுவிக்க வேண்​டு​மா​னால் கணிச​மான தொகையை அளிக்க வேண்​டும் என்று சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தாரை மிரட்​டு​கின்​றனர்.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறி​வுறுத்​தலில், ‘‘அனைத்து இந்​திய குடிமக்​களும் வேலை​வாய்ப்பு வாக்​குறு​தி​கள் அல்​லது சலுகைகள் குறித்து அதிக விழிப்​புணர்​வுடன் இருக்க வேண்​டும். குறிப்​பாக, சுற்​றுலா செல்​பவர்​களுக்கு மட்​டும்​தான் இந்​தி​யர்​களுக்கு விசா இல்​லாத அனு​ம​தியை ஈரான் அரசு அனு​ம​திக்​கிறது. சுற்​றுலா தவிர்த்த மற்ற வர்த்​தகம், வேலை போன்ற விஷ​யங்​களுக்கு கண்​டிப்​பாக விசா அவசி​யம். எனவே, ஈரான் விசா பெற்று தரும் முகவர்​களுக்​கும் குற்ற கும்​பல்​களுக்​கும் தொடர்பு இருக்​கலாம். எனவே, இந்​தி​யர்​கள் மோசடி​யில் சிக்கி கொள்ள வேண்​டாம்’’ என்று எச்​சரிக்கை அளித்​துள்​ளது.

வடமேற்கு டெல்​லி​யில் உள்ள நரேலா​வைச் சேர்ந்த 26 வயது ஹிமான்ஷு மாத்​தூர் என்​பவர் ஈரானில் கடத்​தப்​பட்டு சித்​ர​வதை செய்​யப்​பட்​ட​தாக செய்​தி​கள் வெளி​யாகின. மாத்​தூரிடம் ஆஸ்​திரேலிய விசா​வில் கப்​பல்​களில் வேலை எளி​தில் கிடைப்​ப​தாக அமன் ரதி என்​பவர் ஆசை காட்​டி​யுள்​ளார். அதற்​காக, உ.பி. நொய்​டா​வின் தனி​யார் கல்வி நிறு​வனத்​தில் கப்​பல் துறை​யில் ஒரு டிப்​ளமா முடித்​தார். பின்​னர் தனது சகோ​தரர் மூலம் ரூ.12 லட்​சம் செலுத்தி ஈரானுக்கு ரதி​யுடன் பயணம் செய்​தார்.

ஈரானில் உள்ள சபாஹாரில், மாத்​தூருடன் ரதி​யும் அவர்​களது ஏஜென்ட் தொடர்​புடைய ஒரு கும்​பலால் கடத்​தப்​பட்​டனர். ரூ.1 கோடி கேட்டு மிரட்​டிய​வர்​களிடம் பேசி ரூ.20 லட்​சம் அளித்த பின் அவர்​கள் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தியா திரும்​பிய பிறகு அவர்​கள் கடந்த செப்​. 7-ம் தேதி டெல்லி போலீ​ஸில் புகார் செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x